தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ரோட்டரி சங்கld தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட சாலைப் பாதுகாப்புhd பிரிவு தலைவர் முத்துச்செல்வம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கிவைத்து உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, ரோட்டரி சங்கம் சார்பில் கிராமப்புற மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் கணினி வழிக்கல்வி பெற ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள கணினி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும் விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.