ETV Bharat / city

தூத்துக்குடி துறைமுகத்துக்கு போர்க்கப்பல் நாளை வருகை.!

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு நாளை (14-12-19), நாளை மறுநாள் 15-ந்தேதி கடற்படைக்கப்பல் வரவுள்ளது. இந்த இரு தினங்களிலும் பள்ளி மாணவ-மாணவிகள் போர்க் கப்பல்களை பார்வையிடலாம்.

author img

By

Published : Dec 13, 2019, 2:38 PM IST

Indian war ships arrive in Tuticorin Port Tomorrow
Indian war ships arrive in Tuticorin Port Tomorrow

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தைக் கொண்டாடும் வகையில் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் கடற்படை போர்க்கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருவது வழக்கம்.
இந்தக்கப்பலை மாணவ, மாணவிகள் மட்டும் மதியம் 1.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் பார்வையிடலாம். 15-ஆம் தேதி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும், பொது மக்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வ.உ.சி. துறைமுகத்தில் இந்திய கடற்படையின் போர்க்கப்பலை பார்வையிட அனுமதி உண்டு.
போர்க்கப்பலை பார்வையிடவரும் பள்ளி மாணவ, மணவிகளும், பொதுமக்களும் கடற்படை அதிகாரிகளிடம் கடற்படையின் வாழ்க்கையைப் பற்றி கலந்துரையாடி அறிந்து கொள்ளலாம். கப்பலை பார்வையிட வருபவர்களுக்கு தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தின் பிரதான வாசல் வழியாக அனுமதி தரப்படும்.

தூத்துக்குடி துறைமுகம்
பள்ளிமாணவர்கள் பள்ளிச்சீருடைகளில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் முத்திரையிட்ட மாணவர்கள் பெயர் அடங்கிய பட்டியலோடு வரவேண்டும். பொதுமக்கள் மற்றும் உயர்கல்வி பயில்பவர்களும் ஆதார் அட்டையுடன் கண்டிப்பாக வரவேண்டும். கைபேசி, பை, புகைப்படக்கருவி ஆகியவைகளை துறைமுகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனகடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குளச்சலில் அடையாளம் தெரியாத கப்பல் யாருடையது? - விசாரணையில் வெளியான தகவல்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தைக் கொண்டாடும் வகையில் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் கடற்படை போர்க்கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருவது வழக்கம்.
இந்தக்கப்பலை மாணவ, மாணவிகள் மட்டும் மதியம் 1.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் பார்வையிடலாம். 15-ஆம் தேதி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும், பொது மக்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வ.உ.சி. துறைமுகத்தில் இந்திய கடற்படையின் போர்க்கப்பலை பார்வையிட அனுமதி உண்டு.
போர்க்கப்பலை பார்வையிடவரும் பள்ளி மாணவ, மணவிகளும், பொதுமக்களும் கடற்படை அதிகாரிகளிடம் கடற்படையின் வாழ்க்கையைப் பற்றி கலந்துரையாடி அறிந்து கொள்ளலாம். கப்பலை பார்வையிட வருபவர்களுக்கு தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தின் பிரதான வாசல் வழியாக அனுமதி தரப்படும்.

தூத்துக்குடி துறைமுகம்
பள்ளிமாணவர்கள் பள்ளிச்சீருடைகளில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் முத்திரையிட்ட மாணவர்கள் பெயர் அடங்கிய பட்டியலோடு வரவேண்டும். பொதுமக்கள் மற்றும் உயர்கல்வி பயில்பவர்களும் ஆதார் அட்டையுடன் கண்டிப்பாக வரவேண்டும். கைபேசி, பை, புகைப்படக்கருவி ஆகியவைகளை துறைமுகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனகடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குளச்சலில் அடையாளம் தெரியாத கப்பல் யாருடையது? - விசாரணையில் வெளியான தகவல்

Intro:தூத்துக்குடி துறைமுகத்திற்கு போர்கள் கப்பல் வருகை : கடற்படை அதிகாரிகளிடம் கலந்துரையாட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு.
Body:

தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்திற்கு நாளை 14-ம் தேதி, நாளை மறுநாள் 15-ந்தேதி கடற்படை கப்பல் வரவுள்ளது. 14ம் தேதி பள்ளி மாணவ, மாணவியர்கள் 15ம் தேதி பொதுமக்கள் பார்வையிடலாம் - கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 4ம்தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தைக் கொண்டாடும் வகையில் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் கடற்படை போர் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகிறது.

இக்கப்பலை டிசம்பர்14-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் மதியம் 1.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் பார்வையிடலாம். 15-ஆம் தேதி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும், பொது மக்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வ.உ.சி. துறைமுகத்தில் இந்திய கடற்படையின் போர்க் கப்பலை பார்வையிட அனுமதிக்கப்படும். போர்க் கப்பலை பார்வையிட வரும் பள்ளி மாணவ, மணவிகளும், பொதுமக்களும் கடற்படை அதிகாரிகளிடம் கடற்படையின் வாழ்க்கையைப் பற்றி கலந்துரையாடி அறிந்து கொள்ளலாம்.

கப்பலை பார்வையிட வருபவர்கள் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தின் பிரதான வாசல் வழியாக அனுமதி தரப்படும். பள்ளிமாணவர்கள் பள்ளிச்சீருடைகளில், ஆசிரியர்களுடன் மற்றும் பள்ளி முதல்வர் முத்திரையிட்ட மாணவர்கள் பெயர் அடங்கிய பட்டியலோடு வரவேண்டும். பொதுமக்கள் மற்றும் உயர்கல்வி பயில்பவர்களும் ஆதார் அட்டையுடன் கண்டிப்பாக வரவேண்டும். கைபேசி, பை, புகைப்படக்கருவி ஆகியவைகளை துறைமுகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனகடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.