ETV Bharat / city

மரத்தின் மீது கார் மோதி விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு ; 6 பேர் படுகாயம்

தூத்துக்குடியில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

author img

By

Published : Aug 1, 2021, 9:20 PM IST

மரத்தின் மீது கார் மோதி விபத்து
மரத்தின் மீது கார் மோதி விபத்து

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 7 பேர் ஆம்னி காரில் விருதுநகரிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்லூரணி அருகே சென்ற ஆம்னி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இந்த விபத்தில், ஓட்டுநர் முத்துவேல்குமார் (39) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வாகனத்தில் இருந்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததோடு படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறை விசாரணை

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த நாலாட்டின்புத்தூர் காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஆறு பேரும், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பேருந்து மீது பைக் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 7 பேர் ஆம்னி காரில் விருதுநகரிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்லூரணி அருகே சென்ற ஆம்னி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இந்த விபத்தில், ஓட்டுநர் முத்துவேல்குமார் (39) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வாகனத்தில் இருந்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததோடு படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறை விசாரணை

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த நாலாட்டின்புத்தூர் காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஆறு பேரும், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பேருந்து மீது பைக் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.