ETV Bharat / city

ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு!

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகனுக்கு அத்தொகுதி அதிமுக கட்சி நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு!
author img

By

Published : Apr 24, 2019, 11:32 PM IST

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அதிமுக பாசறை தலைவர் ஜெயலலிதா இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு 28 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளோம். இதில் தலைமைக் கழகம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மோகனைத் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து வேட்பாளராக அறிவித்தால் நாங்கள் மகிழ்ச்சியுடன் களப்பணியாற்றுவோம்.

தற்பொழுது தலைமை கழகத்திலிருந்து ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகன் சுயநலம் மிக்கவர். அவர் மட்டும் தான் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர். இதுமட்டுமில்லாமல் வேட்புமனு பரிசீலனையின் போது எனது பெயர் தான் வேட்பாளர் பட்டியலில் கடைசி வரையில் இடம் பெற்றிருந்தது. இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர் நேர்முகத் தேர்வுக்காக என்னைத் தலைமை கழகத்தினர் அழைத்திருந்தனர். அதன்பேரில் இங்கிருந்து நான் சென்னை செல்லும் இடைப்பட்ட நேரத்தில் பணம் கொடுத்து தன்னை வேட்பாளராக பட்டியலில் இணைத்துக் கொண்டார் மோகன்.

வேட்பாளர் பட்டியல் பரிசீலனையில் இருந்த எனது பெயரை அவர்கள் நீக்கிவிட்டனர். ஆகவே என்னையே தலைமை கழகம் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்து உள்ளவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது எங்களது கருத்து.

தற்பொழுது அதிமுக கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகன் மீது நிறைய வழக்குகள் உள்ளன. பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அபகரித்த வழக்கில் அவர் உள்ளார். எனவே அதிமுக தலைமை கழகம் ஓட்டபிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரான மோகனை மாற்றுவதற்குப் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்’ என்றார்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அதிமுக பாசறை தலைவர் ஜெயலலிதா இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு 28 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளோம். இதில் தலைமைக் கழகம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மோகனைத் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து வேட்பாளராக அறிவித்தால் நாங்கள் மகிழ்ச்சியுடன் களப்பணியாற்றுவோம்.

தற்பொழுது தலைமை கழகத்திலிருந்து ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகன் சுயநலம் மிக்கவர். அவர் மட்டும் தான் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர். இதுமட்டுமில்லாமல் வேட்புமனு பரிசீலனையின் போது எனது பெயர் தான் வேட்பாளர் பட்டியலில் கடைசி வரையில் இடம் பெற்றிருந்தது. இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர் நேர்முகத் தேர்வுக்காக என்னைத் தலைமை கழகத்தினர் அழைத்திருந்தனர். அதன்பேரில் இங்கிருந்து நான் சென்னை செல்லும் இடைப்பட்ட நேரத்தில் பணம் கொடுத்து தன்னை வேட்பாளராக பட்டியலில் இணைத்துக் கொண்டார் மோகன்.

வேட்பாளர் பட்டியல் பரிசீலனையில் இருந்த எனது பெயரை அவர்கள் நீக்கிவிட்டனர். ஆகவே என்னையே தலைமை கழகம் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்து உள்ளவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது எங்களது கருத்து.

தற்பொழுது அதிமுக கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகன் மீது நிறைய வழக்குகள் உள்ளன. பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அபகரித்த வழக்கில் அவர் உள்ளார். எனவே அதிமுக தலைமை கழகம் ஓட்டபிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரான மோகனை மாற்றுவதற்குப் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்’ என்றார்.

Intro:Body:




         
                  
                           
                           
                  
         

                           
                                    
                                             
                                                      
                                             
                                    
                           

                                                      

BALASUBRAMANIAN KALYANI


                                                      

                           

                           

7:02 PM (43 minutes ago)


                           



         
                  
                           
                           
                  
         



         
                  
                           
                  
         

                           
                                    
                                             
                                                      
                                             
                                    
                           

                                                      

to me, RAVIKUMAR, Prince



                                                      


                                                      

                           




 



தமிழகத்தில் ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட தொகுதிகளில் அதிமுக, திமுக மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக வேட்பாளராக எம் சி சண்முகையா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அகல்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.



இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகனுக்கு ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக கட்சி நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அதிமுக பாசறை தலைவர் ஜெயலலிதா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலில் அதிமுக தரப்பில் போட்டியிடுவதற்கு எங்களது தொகுதியில் இருந்து 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். இதில் தலைமை கழகம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மோகனை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து வேட்பாளராக அறிவித்தால் நாங்கள் மகிழ்ச்சியுடன் களப்பணி ஆற்றுவோம். தற்பொழுது தலைமை கழகத்தில் இருந்து  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகன் சுயநலம் மிக்கவர். அவர் மட்டும் தான் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று சுயநலமாக சிந்திக்கக் கூடியவர். இதுமட்டுமில்லாமல் வேட்புமனு பரிசீலனையின் போது எனது பெயர் தான் வேட்பாளர் பட்டியலில் கடைசி வரையில் இடம் பெற்றிருந்தது. இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர் நேர்முகத் தேர்வுக்காக என்னை தலைமை கழகத்தினர் அழைத்திருந்தனர். அதன்பேரில் இங்கிருந்து நான் சென்னை தலைமைக் கழக அலுவலகத்திற்கு சென்றேன். இந்த இடைப்பட்ட நேரத்தில் பணம் கொடுத்து தன்னை வேட்பாளராக வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொண்டார் மோகன். வேட்பாளர் பட்டியல் பரிசீலனையில் இருந்த எனது பெயரை அவர்கள் நீக்கிவிட்டனர். ஆகவே என்னையே தலைமை கழகம் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளவர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது எங்களது கருத்து. விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளவர்களில் மோகனை தவிர மற்ற அனைவருமே இன்னும் ஒருமுறை கூட சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ இந்த தொகுதி  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்ற வாய்ப்பு கிடைக்காதவர்கள். அவர்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனில் மகிழ்ச்சியுடன் கழகப் பணியை ஆற்ற முடியும்.



தற்பொழுது அதிமுக கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகன் மீது நிறைய வழக்குகள் உள்ளன. பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அபகரித்த வழக்கில் அவர் உள்ளார். இதுபோல நிறைய வழக்குகள் அவர் மீது உள்ளது ஆகவே மக்கள் மனதில் ஒரு கரும்புள்ளியாக தெரியக்கூடிய ஒருவரை தலைமை கழகம் ஓட்டபிடாரம் தொகுதியில் வேட்பாளராக அறிவித்துள்ளது. எனவே அதிமுக தலைமை கழகம் ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரான மோகனை மாற்றுவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.




         
                  
                  
         

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.