ETV Bharat / city

தூத்துக்குடியில் தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி!

author img

By

Published : Sep 6, 2019, 9:56 AM IST

தூத்துக்குடி: வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் நேற்று தொடங்கிவைத்தார்.

தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி!

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதியன்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுரேஷ் விஸ்வநாத் உத்தரவின் பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி, தேசிய மக்கள் நீதிமன்றம் , thoothukudi ,  Awareness rally, National People's Court,
மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக பொதுமக்களுக்கும் வழக்குதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திக்குளம் உள்ளிட்ட தாலுகா நீதிமன்றங்கள் உள்ள பகுதிகளில் தேசிய மக்கள் நீதிமன்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி, தேசிய மக்கள் நீதிமன்றம் , thoothukudi ,  Awareness rally, National People's Court,
பொதுமக்களிடம் சென்று துண்டுப்பிரதிகள் கொடுக்கும் பணி
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தலைமையேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இப்பேரணியில் மகிளா நீதிமன்ற நீதிபதி குமார் சரவணன், இரண்டாவது மாவட்ட கூடுதல் நீதிபதி கௌதமன், முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் ஹேமா, சார்பு நீதிபதிகள் சாமுவேல் பெஞ்சமின், மாரீஸ்வரி, பயிற்சி நீதிபதிகள், நீதித் துறை ஊழியர்கள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி, தேசிய மக்கள் நீதிமன்றம் , thoothukudi ,  Awareness rally, National People's Court,
வருகின்ற 14.09.2019 அன்று கூடும் தேசிய மக்கள் நீதிமன்றம்
மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் மக்கள் நீதிமன்றத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரதிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பேரணியானது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கி காய்கறி மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், மாநராட்சி அலுவலகம் வழியாகச் சென்று பின்னர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தை வந்தடைந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதியன்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுரேஷ் விஸ்வநாத் உத்தரவின் பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி, தேசிய மக்கள் நீதிமன்றம் , thoothukudi ,  Awareness rally, National People's Court,
மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக பொதுமக்களுக்கும் வழக்குதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திக்குளம் உள்ளிட்ட தாலுகா நீதிமன்றங்கள் உள்ள பகுதிகளில் தேசிய மக்கள் நீதிமன்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி, தேசிய மக்கள் நீதிமன்றம் , thoothukudi ,  Awareness rally, National People's Court,
பொதுமக்களிடம் சென்று துண்டுப்பிரதிகள் கொடுக்கும் பணி
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தலைமையேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இப்பேரணியில் மகிளா நீதிமன்ற நீதிபதி குமார் சரவணன், இரண்டாவது மாவட்ட கூடுதல் நீதிபதி கௌதமன், முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் ஹேமா, சார்பு நீதிபதிகள் சாமுவேல் பெஞ்சமின், மாரீஸ்வரி, பயிற்சி நீதிபதிகள், நீதித் துறை ஊழியர்கள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி, தேசிய மக்கள் நீதிமன்றம் , thoothukudi ,  Awareness rally, National People's Court,
வருகின்ற 14.09.2019 அன்று கூடும் தேசிய மக்கள் நீதிமன்றம்
மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் மக்கள் நீதிமன்றத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரதிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பேரணியானது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கி காய்கறி மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், மாநராட்சி அலுவலகம் வழியாகச் சென்று பின்னர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தை வந்தடைந்தது.
Intro:தேசிய மக்கள் நீதிமன்ற விழிப்புணர்வு பேரணி- முதன்மை மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தொடங்கி வைத்தார்Body:
தூத்துக்குடி


தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிக்காட்டுதலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுரேஷ் விஸ்வநாத் உத்தரவின் பேரில் வருகின்ற 14.09.2019 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் வழக்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா நீதிமன்றங்களான கோவில்பட்டி ,திருச்செந்தூர், திருவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று தேசிய மக்கள் நீதிமன்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தலைமையேற்று கொடியசைத்து வைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் மகிளா நீதிமன்ற நீதிபதி குமார் சரவணன், இரண்டாவது மாவட்ட கூடுதல் நீதிபதி கௌதமன், முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, சார்பு நீதிபதிகள் சாமுவேல் பெஞ்சமின், மாரீஸ்வரி, பயிற்சி நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

விழிப்புணர்வு பேரணியில் மக்கள்நீதிமன்றத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரதிகள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. பேரணியானது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கி காய்கறி மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், மாநராட்சி அலுவலகம் வழியாக சென்று பின்னர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தை வந்தடைந்தது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.