ETV Bharat / city

நெல்லையின் ஆக்சிஜன் கையாளும் திறனை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன: ஆட்சியர் பெருமிதம்!

author img

By

Published : May 28, 2021, 6:46 AM IST

திருநெல்வேலி: மாவட்டத்தின் ஆக்சிஜன் கையாளும் திறனை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன என, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பெருமையுடன் தெரிவித்துள்ளார்
என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பெருமையுடன் தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் அமைப்புகள் கரோனோ நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் வழங்கினர். இதற்கான நிகழ்ச்சியின் போது, ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் அமைப்புகள் வழங்கி வரும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் மாவட்டத்தில் இதுவரை இருந்த ஆக்சிஜன் பற்றாக்குறை, இனி இருக்காது என எதிர்பார்க்கிறோம்.

காந்திமதி அம்மன் பள்ளியில் அமைந்துள்ள கரோனோ சிகிச்சை மையத்தின் அனைத்து படுக்கைகளிலும் ஆச்சிஜன் வசதி ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட தட்டுப்பாடு, தற்போது சுத்தமாக இல்லை. அதே போல, மாவட்டத்தின் ஆக்சிஜன் கையாளும் திறனைப் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களும் பின்பற்றுகின்றன. இதற்காக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாவட்டத்தின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சம் 950லிருந்து 500ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் ஊரடங்கை பின்பற்ற வேண்டும், நேற்று மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 4 ஆயிரம் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஐந்தாயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு வைத்துள்ளோம்.

என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பெருமையுடன் தெரிவித்துள்ளார்

குறிப்பாக காய்கறி விற்பனை செய்பவர்கள், பத்திரிகையாளர்கள் என குறிப்பிட்ட பிரிவினரை முன்வைத்து இலக்கு வைத்துள்ளோம். ஊரக பகுதிகளில் இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நுகர்வு சராசரியாக ஐந்து முதல் ஆறு கிலோ லிட்டர் தேவைப்படுகிறது. அதற்கேற்ற ஆக்சிஜன் தற்போது வந்து கொண்டிருக்கிறது.

மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும், அண்டை மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் இங்கு வருவதால் ஆக்சிஜன் நுகர்வு தொடர்ந்து ஒரே நிலையில் இருக்கிறது. இருப்பினும் தற்போது தட்டுப்பாடின்றி திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆக்சிஜன் வந்துகொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:யாஸ் புயல் எதிரொலி: நெல்லையில் மிதமான மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் அமைப்புகள் கரோனோ நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் வழங்கினர். இதற்கான நிகழ்ச்சியின் போது, ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் அமைப்புகள் வழங்கி வரும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் மாவட்டத்தில் இதுவரை இருந்த ஆக்சிஜன் பற்றாக்குறை, இனி இருக்காது என எதிர்பார்க்கிறோம்.

காந்திமதி அம்மன் பள்ளியில் அமைந்துள்ள கரோனோ சிகிச்சை மையத்தின் அனைத்து படுக்கைகளிலும் ஆச்சிஜன் வசதி ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட தட்டுப்பாடு, தற்போது சுத்தமாக இல்லை. அதே போல, மாவட்டத்தின் ஆக்சிஜன் கையாளும் திறனைப் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களும் பின்பற்றுகின்றன. இதற்காக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாவட்டத்தின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சம் 950லிருந்து 500ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் ஊரடங்கை பின்பற்ற வேண்டும், நேற்று மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 4 ஆயிரம் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஐந்தாயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு வைத்துள்ளோம்.

என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பெருமையுடன் தெரிவித்துள்ளார்

குறிப்பாக காய்கறி விற்பனை செய்பவர்கள், பத்திரிகையாளர்கள் என குறிப்பிட்ட பிரிவினரை முன்வைத்து இலக்கு வைத்துள்ளோம். ஊரக பகுதிகளில் இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நுகர்வு சராசரியாக ஐந்து முதல் ஆறு கிலோ லிட்டர் தேவைப்படுகிறது. அதற்கேற்ற ஆக்சிஜன் தற்போது வந்து கொண்டிருக்கிறது.

மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும், அண்டை மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் இங்கு வருவதால் ஆக்சிஜன் நுகர்வு தொடர்ந்து ஒரே நிலையில் இருக்கிறது. இருப்பினும் தற்போது தட்டுப்பாடின்றி திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆக்சிஜன் வந்துகொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:யாஸ் புயல் எதிரொலி: நெல்லையில் மிதமான மழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.