ETV Bharat / city

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து: 3 இளைஞர்கள் உயிரிழப்பு - road accident three youths killed

சேலம்: மல்லூர் அருகே புறவழி சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.

three-youths-killed-in-salem-road-accident
three-youths-killed-in-salem-road-accident
author img

By

Published : Nov 27, 2020, 3:32 PM IST

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் தனது சகோதரியின் திருமணத்திற்காக நண்பர்கள் கார்த்திகேயன், பார்த்தசாரதி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வழி பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பார்த்தசாரதி, கார்த்திகேயன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயங்களோடு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஜெகதீசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் அடுத்தடுத்து சாலை விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் தனது சகோதரியின் திருமணத்திற்காக நண்பர்கள் கார்த்திகேயன், பார்த்தசாரதி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வழி பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பார்த்தசாரதி, கார்த்திகேயன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயங்களோடு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஜெகதீசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் அடுத்தடுத்து சாலை விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.