ETV Bharat / city

ஆத்தூரை தனி மாவட்டமாக அறிவியுங்கள்; பொதுமக்கள் கோரிக்கை! - ஆத்தூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டாலினின் கருத்து

சேலம்: இம்மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆத்தூர்
author img

By

Published : Aug 20, 2019, 6:55 AM IST

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமும் ஒன்றாக இருந்தது. இது அரசின் நிர்வாக விவகாரங்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது எனலாம். இதனையடுத்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என்று தனித் தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. தற்போது சேலம் மாவட்டம், 640 வருவாய் கிராமங்கள், 10 வட்டங்கள், 4 வருவாய் கோட்டங்கள் என்று, 5,205 சதுர கி.மீ பரப்பில், பரந்து விரிந்து உள்ளது.

சுமார் 35 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகவும் சேலம் மாவட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களான வீரகனூர், செந்தாரப்பட்டி, தலைவாசல், கொளத்தூர், கோவிந்தபாடி ஆகிய மாவட்டத்தின், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து மக்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றால் குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் பயணித்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆத்தூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டாலின் கருத்து

இதனால் அரசு உதவிகள், சான்றிதழ்கள் வாங்கிட அல்லது தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படைத் தேவைகள் குறித்த புகார் மனுக்களை அளிக்க வேண்டும் என்றால், ஒரு நாளையே சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மக்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. இதே நிலை தான் மாவட்ட நிர்வாக அலுவலகர்களுக்கும். விவசாயத்தையே முழு நேரத் தொழிலாகச் செய்யும் சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.

நேற்று எடப்பாடி நீதிமன்ற திறப்பு விழாவில் எடப்பாடியைத் தலைநகரமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினர். இந்த செய்தியை அறிந்த ஆத்தூர் பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் அரசியல் இயக்கத்தினர், ஆத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தைத் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலுவாக எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ‘ஈடிவி பாரத் தமிழ்’ செய்திகளுக்கு, ஆத்தூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டாலின் பேசுகையில், "ஆத்தூரும் எடப்பாடியும் ஒரே நேரத்தில் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், ஒரே ஆண்டில் தான் பொன் விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில்தான் எடப்பாடியைத் தனி தலைநகரமாகக் கொண்ட புதிய மாவட்டம் சேலம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, சிலர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

அதற்கு முன்பாக அனைத்து தகுதிகளும் கொண்ட ஆத்தூர் நகராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பமாக இருக்கிறது. சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து புதிய மாவட்டத்தை ஆத்தூரைத் தலைமை இடமாகக் கொண்டு உருவாக்கிட முன் வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமும் ஒன்றாக இருந்தது. இது அரசின் நிர்வாக விவகாரங்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது எனலாம். இதனையடுத்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என்று தனித் தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. தற்போது சேலம் மாவட்டம், 640 வருவாய் கிராமங்கள், 10 வட்டங்கள், 4 வருவாய் கோட்டங்கள் என்று, 5,205 சதுர கி.மீ பரப்பில், பரந்து விரிந்து உள்ளது.

சுமார் 35 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகவும் சேலம் மாவட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களான வீரகனூர், செந்தாரப்பட்டி, தலைவாசல், கொளத்தூர், கோவிந்தபாடி ஆகிய மாவட்டத்தின், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து மக்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றால் குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் பயணித்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆத்தூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டாலின் கருத்து

இதனால் அரசு உதவிகள், சான்றிதழ்கள் வாங்கிட அல்லது தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படைத் தேவைகள் குறித்த புகார் மனுக்களை அளிக்க வேண்டும் என்றால், ஒரு நாளையே சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மக்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. இதே நிலை தான் மாவட்ட நிர்வாக அலுவலகர்களுக்கும். விவசாயத்தையே முழு நேரத் தொழிலாகச் செய்யும் சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.

நேற்று எடப்பாடி நீதிமன்ற திறப்பு விழாவில் எடப்பாடியைத் தலைநகரமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினர். இந்த செய்தியை அறிந்த ஆத்தூர் பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் அரசியல் இயக்கத்தினர், ஆத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தைத் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலுவாக எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ‘ஈடிவி பாரத் தமிழ்’ செய்திகளுக்கு, ஆத்தூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டாலின் பேசுகையில், "ஆத்தூரும் எடப்பாடியும் ஒரே நேரத்தில் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், ஒரே ஆண்டில் தான் பொன் விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில்தான் எடப்பாடியைத் தனி தலைநகரமாகக் கொண்ட புதிய மாவட்டம் சேலம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, சிலர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

அதற்கு முன்பாக அனைத்து தகுதிகளும் கொண்ட ஆத்தூர் நகராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பமாக இருக்கிறது. சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து புதிய மாவட்டத்தை ஆத்தூரைத் தலைமை இடமாகக் கொண்டு உருவாக்கிட முன் வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

Intro:சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Body:தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ஐந்தாவது நகரமாக விளங்குவது சேலம் மாநகரம். ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பழமை கொண்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் தலைநகராக விளங்கி வந்தது.

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் அமைந்திருந்தது அரசு நிர்வாக விஷயங்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது எனலாம்.

இதனையடுத்து சேலம் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், நாமக்கல் மாவட்டம் என்று தனித் தனியாக பிரிக்கப்பட்டது. தற்போது சேலம் மாவட்டம், 640 வருவாய் கிராமங்கள், 10 வட்டங்கள், 4 வருவாய் கோட்டங்கள் என்று, 5205 சதுர கிலோமீட்டர் பரப்பில், பரந்து விரிந்து உள்ளது.

சுமார் 35 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகவும் சேலம் மாவட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களான வீரகனூர், செந்தாரப்பட்டி, தலைவாசல், கொளத்தூர், கோவிந்தபாடி ஆகிய மாவட்டத்தின் , கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து மக்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 3 மணி நேரம் பயணித்தால் மட்டுமே சாத்தியமாகும்.

இதனால் அரசு உதவிகள் மற்றும் சான்றிதழ்கள் வாங்கிட அல்லது தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்த புகார் மனுக்களை அளிக்கவேண்டும் என்றால், ஒரு நாளையே சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மக்கள் செலவழிக்க வேண்டி உள்ளது.

இதே நிலை தான் மாவட்ட நிர்வாக அதிகாரி களுக்கும். விவசாயத்தையே முழு நேர தொழிலாக செய்யும் சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.

இதன் காரணமாக அரசின் நலத்திட்டங்கள் அல்லது அரசு உதவிகள் சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மக்களுக்கு முழுமையாக சென்று சேர்வது இல்லை என்பதே பரவலான தகவலாக இருக்கிறது.

இந்த நிலையில் தான் சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி , தலைவாசல் , தம்மம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு ஆத்தூர் மாவட்டம் என்று புதியதாக மாவட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நேற்று எடப்பாடி நீதிமன்ற திறப்பு விழாவில் எடப்பாடியை தலைநகரமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினர்.

இந்த செய்தியை அறிந்த ஆத்தூர் பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் அரசியல் இயக்கத்தினர், ஆத்தூரை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலுவாக எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 'இ டிவி' பாரத் தமிழுக்கு , ஆத்தூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டாலின் பிரத்தியேக பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஆத்தூர் எடப்பாடியும் ஒரே நேரத்தில் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், ஒரே ஆண்டில் தான் பொன் விழாவும் கொண்டாடப்பட்டது.

இதனால் ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கிட சில ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின்னர் அரசியல் காரணங்களால் அந்த நடவடிக்கைகள் அப்படியே நிறுத்தப்பட்டு மக்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் எடப்பாடியை தனி தலைநகரமாக கொண்ட புதிய மாவட்டம் சேலம் மாவட்டத்திலிருந்து இருந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, சிலர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக எழுதி உள்ளதாக தெரிகிறது அதற்கு முன்பாக அனைத்து தகுதிகளும் கொண்ட ஆத்தூர் நகராட்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.


Conclusion:மேலும் ஸ்டாலின் ," இப்போதாவது ஆத்தூர் பகுதி மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அணுகுமுறையை கைவிட்டு, சேலம் மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிய மாவட்டத்தை ஆத்தூரை தலைமை இடமாக கொண்டு உருவாக்கிட முன் வர வேண்டும்.

இல்லை என்றால் தொடர்ச்சியான போராட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுத்து நடத்தப்படும்" என்றும் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.