ETV Bharat / city

திமுக ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் தள்ளிவைப்பு- மழைதான் காரணம்!

author img

By

Published : May 14, 2022, 6:40 PM IST

மழை காரணமாக திமுக ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு

சேலம்: முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, 'நூறாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்' தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் கூட்டம் நடைபெறும் இடத்தினை தேர்வு செய்து அதற்கான முன்னேற் பாடுகளை அக்கட்சியினர் செய்து வந்தனர். பின்னர் கூட்டம் நடைபெறுவதற்கான இடத்தினை நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அலுவலர்கள் இன்று (மே 14) ஆய்வு செய்தனர்.
அப்போது, அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் பேசும்போது,' தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், மழையின் காரணமாக பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

ஆத்தூர் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார் என அறிவிப்பு வந்ததில் இருந்து 22ஆம் தேதி, 18ஆம் தேதி என தேதி மாறி மாறி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது திமுக வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்தூரில் அமைச்சர் கேஎன் நேரு பேட்டி

இதையும் படிங்க: கருணாநிதி பெயர் சூட்டும் தீர்மானம் நிறுத்தம்..! அது அண்ணாமலைக்கு தெரியாது..- அமைச்சர் சொன்ன சேதி!

சேலம்: முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, 'நூறாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்' தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் கூட்டம் நடைபெறும் இடத்தினை தேர்வு செய்து அதற்கான முன்னேற் பாடுகளை அக்கட்சியினர் செய்து வந்தனர். பின்னர் கூட்டம் நடைபெறுவதற்கான இடத்தினை நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அலுவலர்கள் இன்று (மே 14) ஆய்வு செய்தனர்.
அப்போது, அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் பேசும்போது,' தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், மழையின் காரணமாக பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

ஆத்தூர் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார் என அறிவிப்பு வந்ததில் இருந்து 22ஆம் தேதி, 18ஆம் தேதி என தேதி மாறி மாறி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது திமுக வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்தூரில் அமைச்சர் கேஎன் நேரு பேட்டி

இதையும் படிங்க: கருணாநிதி பெயர் சூட்டும் தீர்மானம் நிறுத்தம்..! அது அண்ணாமலைக்கு தெரியாது..- அமைச்சர் சொன்ன சேதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.