ETV Bharat / city

திமுக பிரமுகர் விடுத்த வெடிகுண்டு மிரட்டல்; கதிகலங்கிய காவல்துறையினர்..!

author img

By

Published : Aug 10, 2019, 8:39 PM IST

சேலம்: சென்னையிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு உள்ளதென மிரட்டல் விடுத்து, ஓமலூரில் தலைமறைவான திமுக பிரமுகர் அருண்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகர் அருண்ராஜ்

டெல்லி காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், சென்னையிலிருந்து வரும் விமானத்தில், யாசின் என்ற பெண் வெடிகுண்டுடன் வருகிறார். குறிப்பிட்ட நேரத்தில், அது வெடிக்கும் எனக்கூறி தொடர்பைத் துண்டித்துள்ளார்.

இதையடுத்து, டெல்லி விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, எந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அது தமிழ்நாட்டு எண் என தெரியவந்ததும், சென்னைக்கு தகவல் தெரிவித்து உளவுப் பிரிவு காவல்துறையினர் மூலம் அடையாளம் தெரியாத அந்த நபர் குறித்து விசாரிக்க அறிவுறுத்தப்பட்டது.

சேலம் மாவட்ட முகவரியில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சேலம் காவல்துறையினருக்கு இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் விசாரித்ததில், ஓமலூர் காமராஜர் நகரில் வசிக்கும் அண்ணாதுரை மகன் அருண்ராஜ் (27) என தெரியவந்தது.

டிப்ளமோ படிப்பைப் பாதியில் நிறுத்திய அவர், இணையதளம் மூலம் ஜிபிஎஸ் கருவி பயன்பாட்டுக்கு கணினியில் வரைபடம் தயாரித்து பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வந்துள்ளார். அதேபோல, ஓமலூர் பேரூர் திமுக இளைஞர் அணி அமைப்பாளராகவும் பணி செய்து வந்துள்ளது தெரியவந்தது.

ஓமலூர் காவல்துறையினர் நேற்று அருண்ராஜை தேடி வீட்டுக்குச் சென்றபோது, அவர் அங்கு இல்லை. கைப்பேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது தாய் சித்ரா, சகோதரர் மோகன்ராஜ் ஆகியோரிடமும் காவல்துறையினர் தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அருண்ராஜ் மேச்சேரியில் உள்ள அவரின் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அருண்ராஜை காவல்துறையினர் கைது செய்து, ஓமலூர் அழைத்துவந்தனர். அருண்ராஜ் கைது செய்யப்பட்டது குறித்து காவல்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அருண்ராஜிடம் ஓமலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாரமங்கலம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வைத்து, அருண்ராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், சென்னையிலிருந்து வரும் விமானத்தில், யாசின் என்ற பெண் வெடிகுண்டுடன் வருகிறார். குறிப்பிட்ட நேரத்தில், அது வெடிக்கும் எனக்கூறி தொடர்பைத் துண்டித்துள்ளார்.

இதையடுத்து, டெல்லி விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, எந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அது தமிழ்நாட்டு எண் என தெரியவந்ததும், சென்னைக்கு தகவல் தெரிவித்து உளவுப் பிரிவு காவல்துறையினர் மூலம் அடையாளம் தெரியாத அந்த நபர் குறித்து விசாரிக்க அறிவுறுத்தப்பட்டது.

சேலம் மாவட்ட முகவரியில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சேலம் காவல்துறையினருக்கு இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் விசாரித்ததில், ஓமலூர் காமராஜர் நகரில் வசிக்கும் அண்ணாதுரை மகன் அருண்ராஜ் (27) என தெரியவந்தது.

டிப்ளமோ படிப்பைப் பாதியில் நிறுத்திய அவர், இணையதளம் மூலம் ஜிபிஎஸ் கருவி பயன்பாட்டுக்கு கணினியில் வரைபடம் தயாரித்து பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வந்துள்ளார். அதேபோல, ஓமலூர் பேரூர் திமுக இளைஞர் அணி அமைப்பாளராகவும் பணி செய்து வந்துள்ளது தெரியவந்தது.

ஓமலூர் காவல்துறையினர் நேற்று அருண்ராஜை தேடி வீட்டுக்குச் சென்றபோது, அவர் அங்கு இல்லை. கைப்பேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது தாய் சித்ரா, சகோதரர் மோகன்ராஜ் ஆகியோரிடமும் காவல்துறையினர் தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அருண்ராஜ் மேச்சேரியில் உள்ள அவரின் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அருண்ராஜை காவல்துறையினர் கைது செய்து, ஓமலூர் அழைத்துவந்தனர். அருண்ராஜ் கைது செய்யப்பட்டது குறித்து காவல்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அருண்ராஜிடம் ஓமலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாரமங்கலம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வைத்து, அருண்ராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Intro:
சென்னையிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக, மிரட்டல் விடுத்து, தலைமறைவான ஓமலூர் திமுக பிரமுகர் அருண் ராஜ் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:
டெல்லி போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசியவர், சென்னையிலிருந்து வரும் விமானத்தில், யாசின் என்ற பெண் வெடிகுண்டுடன் வருகிறார். குறிப்பிட்ட நேரத்தில், அது வெடிக்கும்எனக்கூறி, போனை துண்டித்துள்ளார்.

இதையடுத்து, டெல்லி விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. தொடர்ந்து, எந்த எண்ணிலிருந்து, அழைப்பு வந்தது என, போலீசார் விசாரித்தனர்.

அதில், தமிழ்நாடு எண் என தெரியவந்ததால், சென்னைக்கு தகவல் தெரிவித்து, உளவு பிரிவு போலீசார் மூலம், மர்ம நபர் குறித்து விசாரிக்க அறிவுறுத்தப்பட்டது.

சேலம் மாவட்ட முகவரி என தெரிந்ததால், சேலம் போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் விசாரித்ததில், மொபைல் எண் அடிப்படையிலுள்ள முகவரி மூலம், ஓமலூர், காமலாபுரத்தைச் சேர்ந்தவரும், தற்போது, ஓமலூர், காமராஜர் நகரில் வசிக்கும் அண்ணாதுரை மகன் அருண்ராஜ், 27, என தெரியவந்தது.

டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்திய அவர், ஆன்லைன் மூலம், ஜி.பி.எஸ்., கருவி பயன்பாட்டுக்கு, கணினியில் வரைபடம் தயாரித்து, பல்வேறு தனியார் நிறுனங்களுக்கு வழங்கி வந்துள்ளார்.

அதேபோல ஓமலூர் பேரூர் திமுக இளைஞர் அணி அமைப்பாளராகவும் அரசியல் பணி செய்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அவரது போனில் இருந்து தான் நேற்று முன்தினம் விமான நிலையத்திற்கு போன் செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில மாதமாக, அபுதாபி, கத்தார் நாடுகளில் பணிபுரிந்ததும் தெரியவந்தது. ஓமலூர் போலீசார், நேற்று, அருண்ராஜை தேடி வீட்டுக்கு சென்றபோது, அவர் இல்லை. மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. Conclusion:
அவரது தாய் சித்ரா, அருண்ராஜ் சகோதரர் மோகன்ராஜூ ஆகியோரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே அருண்ராஜ் மேச்சேரியில் உள்ள அவரின் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த தாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து அருண் ராஜை ஓமலூர் போலீசார் கைது செய்து ஓமலூர் அழைத்துவந்தனர் .

அருண்ராஜ் கைது செய்யப்பட்டது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஓமலூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் .

மேலும் அருண்ராஜ் இடம் ஓமலூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர்.

மேலும், ஓமலூர் , தாரமங்கலம் , தீவட்டிப்பட்டி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வைத்தும் அருண்ராஜ் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.