ETV Bharat / city

' தேர்தல் அலுவலர் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் ' -  திமுக குற்றச்சாட்டு - சேலம் திமுக மாவட்ட செயலாளர் செய்தியாளர் சந்திப்பு

சேலம்: மாவட்ட ஆட்சியர் ராமன் அதிமுகவிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் அரசுப்பள்ளிகளில் உரிய இட வசதி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை கல்லூரிகளில் நடத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Salem DMK criticize Electoral officer
Salem DMK criticize Electoral officer
author img

By

Published : Dec 26, 2019, 2:00 PM IST

சேலம் கலைஞர் மாளிகையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எஸ்.ஆர். சிவலிங்கம், "சேலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அரசு அலுவலர்கள் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதால் அவரை மாற்றவேண்டும். இதுகுறித்து, ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசுப் பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த போதுமான வசதிகள் இல்லாததால் அனைத்து அடிப்படை வசதிகளும் கூடிய கல்லூரிகளை தேர்வு செய்து, அங்குதான் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேவையான கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்ய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்" என்றார்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செய்தியாளர் சந்திப்பு

மேலும், சேலம் மாவட்டத்தில் தோல்வி பயத்திலேயே ஆளும் கட்சியினர் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டிய அவர், தேர்தலில் ஆளும் கட்சியினர் விதிமுறைகளை மீறினால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு திமுக ஒருபோதும் பொறுப்பு அல்ல எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 15ஆவது ஆண்டில் சுனாமி தினம் - ஆழிப்பேரலை தந்த ஆறாத வடு

சேலம் கலைஞர் மாளிகையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எஸ்.ஆர். சிவலிங்கம், "சேலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அரசு அலுவலர்கள் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதால் அவரை மாற்றவேண்டும். இதுகுறித்து, ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசுப் பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த போதுமான வசதிகள் இல்லாததால் அனைத்து அடிப்படை வசதிகளும் கூடிய கல்லூரிகளை தேர்வு செய்து, அங்குதான் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேவையான கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்ய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்" என்றார்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செய்தியாளர் சந்திப்பு

மேலும், சேலம் மாவட்டத்தில் தோல்வி பயத்திலேயே ஆளும் கட்சியினர் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டிய அவர், தேர்தலில் ஆளும் கட்சியினர் விதிமுறைகளை மீறினால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு திமுக ஒருபோதும் பொறுப்பு அல்ல எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 15ஆவது ஆண்டில் சுனாமி தினம் - ஆழிப்பேரலை தந்த ஆறாத வடு

Intro:திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் ஊடக செய்தியாளர்களை சந்தித்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அரசுப்பள்ளிகளில் உரிய இட வசதி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை கல்லூரிகளில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Body:சேலத்தில் நடைபெறுகின்ற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி பயத்திலேயே ஆளும் கட்சியினர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருவதாக சேலம் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் குற்றச்சாட்டு.

இதனால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு திமுக ஒருபோதும் பொறுப்பல்ல எனவும் தெரிவித்தார்.

சேலம் கலைஞர் மாளிகையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எஸ்ஆர் சிவலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற உள்ளாட்சி தேர்தலில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதால் அவரை மாற்ற வலியுறுத்தி ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் அரசு பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த போதுமான வசதிகள் இல்லாததால் அனைத்து அடிப்படை வசதிகளும் கூடிய கல்லூரிகளை தேர்வு செய்து அங்கு தான் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் சேலம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேவையான கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்ய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் சேலம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி வருவதாகவும் இது குறித்து உரிய ஆதாரத்துடன் திமுகவினர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர் சேலம் மாவட்டத்தில் நடுநிலையான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் சேலம் மாவட்டத்தில் தோல்வி பயத்திலேயே ஆளும் கட்சியினர் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக குற்றம்சாட்டிய அவர் தேர்தலில் ஆளும் கட்சியினர் விதிமுறைகளை மீறினால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு திமுக ஒருபோதும் பொறுப்பு அல்ல எனவும் தெரிவித்தார்.

பேட்டி: எஸ்.ஆர் சிவலிங்கம் - சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் திமுக


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.