ETV Bharat / city

"சேலம் மாவட்டத்தில் தான் அதிக வழக்குகளுக்குத் தீர்வு" - பூர்வீக மாவட்டம் குறித்து பூரித்த முதலமைச்சர் பழனிசாமி!

author img

By

Published : Aug 18, 2019, 10:33 PM IST

சேலம்: எடப்பாடியில் புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம், எடப்பாடியில் புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றங்களைச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.

அப்போது, " 908 வழக்குகள் எடப்பாடி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 406 புதிய நீதி மன்றங்கள் உருவாக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்கள் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 1265 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது " - என்றார்.

அதேபோல், ’சேலம் மாவட்டத்தில் தான் அதிக வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது. சமரசம் மூலம், வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு நீதிமன்றங்கள் 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் மின்னணு முத்திரைத்தாள் முறை உச்ச நீதிமன்ற அறிவிப்பை ஏற்று, தற்போது நம் மாநிலத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் தமிழ்நாட்டில் பாலியல் வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்க, மாநில அரசு பரிந்துரை செய்யும்’ என்று தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் இளந்திரையன் மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், சேலம் மாவட்ட தலைமை நீதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றங்களைச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.

அப்போது, " 908 வழக்குகள் எடப்பாடி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 406 புதிய நீதி மன்றங்கள் உருவாக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்கள் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 1265 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது " - என்றார்.

அதேபோல், ’சேலம் மாவட்டத்தில் தான் அதிக வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது. சமரசம் மூலம், வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு நீதிமன்றங்கள் 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் மின்னணு முத்திரைத்தாள் முறை உச்ச நீதிமன்ற அறிவிப்பை ஏற்று, தற்போது நம் மாநிலத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் தமிழ்நாட்டில் பாலியல் வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்க, மாநில அரசு பரிந்துரை செய்யும்’ என்று தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் இளந்திரையன் மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், சேலம் மாவட்ட தலைமை நீதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Intro:சேலம் மாவட்டம் எடப்பாடி யில் புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமணி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. Body:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு:

908 வழக்குகள் எடப்பாடி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.

406 புதிய நீதி மன்றங்கள் உருவாக்க அரசு அனுமதி வழங்கி. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்கள் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

1265 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நீங்க தெரிந்தவர்களுக்கு சேமநல நிதி ஏழு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.


சேலம் மாவட்டத்தில்தான் அதிக வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. அதே போல சமரசம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் 2011 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

நீதிமன்றங்களில் மின்னணு முத்திரைத்தாள் முறையை உச்ச நீதிமன்ற அறிவிப்பை ஏற்று தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீதிபதி சுந்தரேஷ் எடப்பாடி தொகுதி பற்றிய நிறைய கூறியிருக்கிறார். முருக பக்தர்களுக்கும் எடப்பாடி க்கும் உள்ள தொடர்பை அழகாக சொன்னார்.

பழனியில் எடப்பாடி காவடி பக்தர்களுக்கு மட்டும் தான் சிறப்பு அனுமதி கிடைத்துள்ளது. பந்தியில் நானும் எனது குடும்பத்தினரும் நண்பர்களும் சேர்ந்து முருகன் கோயிலை எடப்பாடியில் தனிக்கோவிலாக கட்டியிருக்கிறோம்.

விரைவில் தமிழகத்தின் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு பரிந்துரை செய்யும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.Conclusion:இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் இளந்திரையன் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சேலம் மாவட்ட தலைமை நீதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.