சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவர் கால்நடை பராமரிப்புத் துறையில், உயர் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி பழனியம்மாள் பத்திரப்பதிவுத் துறை சார்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியரின் மகன் அருண்பிரசாத் ஆஸ்திரேலியாவில் உள்ள ராயல் பிரின்ஸ் ஆல்பிரட் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
அப்பாடா! கடைசியா வந்திருச்சு... வாட்ஸ்அப் புது அப்டேட்
அதே பகுதியில் சீனாவைச் சேர்ந்த கிரிஸ்டல் ஜியாங் என்னும் இளம்பெண், ஜெனின்ங்ஸ் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தின் மனிதவள ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் நட்பு உருவாகி காதலாக வளர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இன்று சேலத்தில் திருமணமும் நடந்தேறியது.

சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வுக்கு உறவினர்கள் ஏராளமானோர் நேரில் வந்திருந்து அட்சதை தூவி பரிசுப்பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினர்.
சீன மகள், மணமகனின் உறவினர்களுக்கும், திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் வணக்கம் கூறி வரவேற்று நன்றி தெரிவித்து தமிழில் பேசியது, திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.