ETV Bharat / city

கடத்திச் செல்லப்பட்ட தொழில் அதிபர் காவல் நிலையத்தில் தஞ்சம்! - ABDUCTED BUSINESS MAN

சேலம்: பணத்திற்காக கடத்திச் செல்லப்பட்ட தொழிலதிபர் திடீரென காவல் நிலையம் வந்து தஞ்சம் அடைந்ததையடுத்து, அவரிடம் கடத்தல் குறித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடத்திசெல்லப்பட்ட சுரேஷ்
author img

By

Published : Jun 20, 2019, 8:49 AM IST

ஆத்தூர் அருகே பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). தொழிலதிபரான இவர் கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டிலிருந்து பணி நிமித்தமாக வெளியில் சென்ற பின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்ட காவல் துறைக்கு, புதன்கிழமையன்று சுரேஷின் வாகனம் சேலம் அரசு தலைமை மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

கடத்திச் செல்லப்பட்ட சுரேஷிடம் காவல் துறையினர் விசாரணை நடத்து காட்சி

வாகனத்தை கைப்பற்றிய காவல்துறை இது குறித்து துப்பு துலக்க ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜு, வாழப்பாடி துணை கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது. இந்த நிலையில் புதன்கிழமை (ஜூன் 19) இரவு 9 மணியளவில் சுரேஷ், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையம் வந்து தஞ்சமடைந்தார்.

இது குறித்து காவல் துறையினரிடம் சுரேஷ், பணத்திற்காகத் தன்னை சிலர் கடத்திச் சென்றதாகவும், காவல்துறையினர் தேடுவதை அறிந்த கடத்தல்காரர்கள் தன்னை சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை என்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.

பின்னர் தான் சேலத்தில் உள்ளதாகத் தனது மனைவிக்குத் தெரிவித்துவிட்டு பேருந்து மூலம் காவல் நிலையம் வந்ததாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து கடத்தல்காரர்களை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

ஆத்தூர் அருகே பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). தொழிலதிபரான இவர் கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டிலிருந்து பணி நிமித்தமாக வெளியில் சென்ற பின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்ட காவல் துறைக்கு, புதன்கிழமையன்று சுரேஷின் வாகனம் சேலம் அரசு தலைமை மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

கடத்திச் செல்லப்பட்ட சுரேஷிடம் காவல் துறையினர் விசாரணை நடத்து காட்சி

வாகனத்தை கைப்பற்றிய காவல்துறை இது குறித்து துப்பு துலக்க ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜு, வாழப்பாடி துணை கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது. இந்த நிலையில் புதன்கிழமை (ஜூன் 19) இரவு 9 மணியளவில் சுரேஷ், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையம் வந்து தஞ்சமடைந்தார்.

இது குறித்து காவல் துறையினரிடம் சுரேஷ், பணத்திற்காகத் தன்னை சிலர் கடத்திச் சென்றதாகவும், காவல்துறையினர் தேடுவதை அறிந்த கடத்தல்காரர்கள் தன்னை சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை என்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.

பின்னர் தான் சேலத்தில் உள்ளதாகத் தனது மனைவிக்குத் தெரிவித்துவிட்டு பேருந்து மூலம் காவல் நிலையம் வந்ததாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து கடத்தல்காரர்களை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

Intro:கடத்திச் செல்லப்பட்ட தொழில் அதிபர் காவல் நிலையம் தஞ்சம் அடைந்தார் .Body:கடத்திச் செல்லப்பட்ட தொழில் அதிபர் காவல் நிலையம் தஞ்சம் அடைந்தார் .

தனிப்படை போலீசார் அழைத்து சென்று விசாரணை


சேலம் மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட தொழிலதிபர் திடீரென காவல் நிலையம் வந்து தஞ்சம் அடைந்தார்.
அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாரதிபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.
40 வயதான சுரேஷ் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார் .

இது தவிர தனியார் பள்ளி ஒன்றில் பங்குதாரராகவும், கல்குவாரியும் வைத்துள்ளார் .

இவர் கடந்த திங்கள் மாலை வீட்டில் இருந்து காரில் வந்தபோது கடத்திச் செல்லப்பட்டார்.

சுரேஷ் வந்த காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு பிறகு ஸ்கார்பியோ காரில் கடத்திச் செல்லப்பட்டார்.

இதை அறிந்த அவரது குடும்பத்தினர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .

இதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது.

இந்த நிலையில் புதன் காலை சுரேஷ் கடத்திச் செல்லப்பட்ட ஸ்கார்பியோ கார் சேலம் அரசு தலைமை மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
இதனை அறிந்த ஸ்கார்பியோ காரை மீட்டு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் .

இந்த நிலையில் கடத்தலில் துப்பு துலங்க ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜு மற்றும் வாழப்பாடி துணை கண்காணிப்பாளர்
சூரிய மூர்த்தி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர் .

இந்த நிலையில் புதன் இரவு 9 மணி அளவில் சுரேஷ் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையம் வந்து தஞ்சம் அடைந்தார் .

தன்னை சிலர் கடத்திச் சென்றதாகவும் போலீசார் தேடுவதை அறிந்த கடத்தல்காரர்கள் தன்னை சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை என்ற பகுதியில் இறக்கி விட்டு விட்டதாகவும், பின்னர் தான் சேலத்தில் உள்ளதாக தனது மனைவிக்கு தெரிவித்துவிட்டு டவுன் பஸ் மூலம் சேலம் புதிய பேருந்து நிலையம் வந்து பள்ளப்பட்டி காவல்நிலை வந்து தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.

இதுபற்றி உடனே சேலம் போலீசார் தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .

உடனே தனிப்படை போலீசார் சேலம் விரைந்து வந்து சுரேசை ஆத்தூர் அழைத்து சென்று விசாரணை செய்து வருகிறார்கள் .

சுரேசை கடத்தியது 5 பேர் கும்பல் என தெரியவந்து இருக்கிறது.

ஸ்கார்பியோ காரில் கடத்திய கடத்தல்காரர்கள் சேலம் காரிப்பட்டி மற்றும் வீராணம் போன்ற பகுதிகளில் வீடுகளில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.Conclusion:இது குறித்தும் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.