ETV Bharat / city

இன்று முதல் கோ ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புச் சலுகை!

author img

By

Published : Sep 16, 2019, 3:15 PM IST

தமிழ்நாடு முழுவதுமுள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கிளைகளில் தீபாவளியை முன்னிட்டு 30 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோ-ஆப்டெக்ஸின் சிறப்பு விற்பனையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று தொடங்கிவைத்தனர்.

கோ ஆப்டெக்ஸின் சிறப்பு விற்பனையின் துவக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சிடர்கள் பங்கேற்பு

கோ-ஆப்டெக்ஸ் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 24 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவைபுரிந்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கோலாகலமான தீபாவளி கொண்டாடத்திற்கு கோ-ஆப் டெக்ஸில் 30 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி!

இதை முன்னிட்டு சேலம் கோ-ஆப்டெக்ஸில் 30 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ராமன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். நடப்பாண்டில் ரூபாய் 5 கோடியே 80 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விருதுநகரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கிளையில் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தார்.

இந்த ஆண்டு உடல்நலத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள், பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் வகையில் செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடி சேலைகள் ஆகியவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 24 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவைபுரிந்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கோலாகலமான தீபாவளி கொண்டாடத்திற்கு கோ-ஆப் டெக்ஸில் 30 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி!

இதை முன்னிட்டு சேலம் கோ-ஆப்டெக்ஸில் 30 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ராமன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். நடப்பாண்டில் ரூபாய் 5 கோடியே 80 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விருதுநகரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கிளையில் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தார்.

இந்த ஆண்டு உடல்நலத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள், பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் வகையில் செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடி சேலைகள் ஆகியவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Intro:சேலம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவிகித சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ராமன் துவக்கி வைத்தார். மேலும் 5.80 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Body:கோ-ஆப்டெக்ஸ் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 24 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோ-ஆப்டெக்ஸில் 30 சதவிகித சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ராமன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு ரூபாய் 5 கோடியே 80 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உடல்நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் மற்றும் பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் வகையில் செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடி சேலைகள் ஆகியவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.