ETV Bharat / city

குளிக்கச் சென்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு..!

சேலம்: கிணற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் காட்டூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jun 27, 2019, 8:52 AM IST

Updated : Jun 27, 2019, 10:39 AM IST

குளிக்க சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு!

சேலம் மாவட்டம், நரசோதி பட்டியைச் சேர்ந்தவர் கோபி(22). இவர் அழகாபுரம் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இருசக்கர வாகனப் பழுது பார்க்கும் பட்டறை வைத்துள்ளார். நேற்றுமாலை கோபி காட்டூர் பகுதியில் உள்ள கிணற்றில் தனது மூன்று நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக ் கொண்டிருந்த போது அவர் எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கினார்.

குளிக்க சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு!

இதனைப்பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்களுடன் வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணிநேர தேடுதலுக்கு பிறகு கோபியின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், நரசோதி பட்டியைச் சேர்ந்தவர் கோபி(22). இவர் அழகாபுரம் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இருசக்கர வாகனப் பழுது பார்க்கும் பட்டறை வைத்துள்ளார். நேற்றுமாலை கோபி காட்டூர் பகுதியில் உள்ள கிணற்றில் தனது மூன்று நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக ் கொண்டிருந்த போது அவர் எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கினார்.

குளிக்க சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு!

இதனைப்பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்களுடன் வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணிநேர தேடுதலுக்கு பிறகு கோபியின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:சேலம் அழகாபுரம் அருகே உள்ள காட்டு பகுதியில் உள்ள கிணற்றில் குளித்த நரசோதிபட்டியை சேர்ந்த வாலிபர் கோபி தண்ணீரில் மூழ்கி சாவு.


Body:சேலம் குரங்கு சாவடி அருகே உள்ள நரசோதி பட்டியைச் சேர்ந்தவர் கோபி 22 வயதான இவர் சேலம் அழகாபுரம் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பட்டறை வைத்துள்ளார்.

இன்று காட்டூர் பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து விட்ட காரணத்தால் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அதன்படி கோபி தனது பட்டறையை மூடிவிட்டு அதே பகுதியில் உள்ள தரைமட்ட கிணற்றில் இறங்கி மாலையில் நண்பர்களுடன் குறித்துள்ளார். அப்பொழுது கோபி சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.

இதனையடுத்து கோபியுடன் குறித்த அவருடைய நண்பர்கள் 3 பேரும் கிணற்றில் இருந்து மேலே வந்து உறவினர்களுக்கு தகவலை தெரிவித்தனர்.

பின்னர் அழகாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசாரும் தீயணைப்பு மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் கிணற்றில் தேடி உடலை மீட்டெடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


Conclusion:
Last Updated : Jun 27, 2019, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.