ETV Bharat / city

'ஆசை, ஆசையாய் வாங்கும் திண்பண்டங்களில் குவிந்துள்ள ஆபத்துகள்'

author img

By

Published : Nov 1, 2019, 11:18 PM IST

மதுரை: மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் சுமார் 20 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆசையாய் வாங்கும் திண்பண்டங்களில் குவிந்துள்ள ஆபத்துகள்

மதுரை முனிசாலை பகுதியில் உள்ள கடைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தடைசெய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை அனுமதியின்றி பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்ட போது, காலாவதியான திண்பண்டங்கள், பொருட்களை அங்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பேட்டி

இதனையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான காலாவதியான பொருட்களை உணவுத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியை சுற்றியுள்ள கடைகளில் நடத்திய ஆய்வில், 200-க்கும் மேற்பட்ட கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பேசிய உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சோமசுந்தரம், "மக்கள் பலர் எவ்வித முன்னெச்சரிக்கையும், விழிப்புணர்வும் இன்றி தங்களின் குழந்தைக்கு காலாவதியான உணவு பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். இதனால் அக்குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள், உடல் நல சீர்கேடுகள் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் முன்பு குழந்தைகள் வாங்கி உண்ணும் தரமற்ற உணவுகள் குறித்தும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

மேலும் பேசிய அவர், மேல்தட்டு மக்கள் வாங்கும் கடைகள், கீழ்தட்டு மக்கள் வாங்கும் கடைகள் என்று பிரித்து சோதனை நடத்தியதாகவும் இருகடைகளிலுமே காலவாதியான பொருட்கள் விற்கப்படுவதாகவும் இது குறித்து உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

100 களங்களைப் பார்த்த ஜல்லிக்கட்டுக் காளை மரணம்: பொதுமக்கள் இறுதிச் சடங்கு!

மதுரை முனிசாலை பகுதியில் உள்ள கடைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தடைசெய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை அனுமதியின்றி பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்ட போது, காலாவதியான திண்பண்டங்கள், பொருட்களை அங்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பேட்டி

இதனையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான காலாவதியான பொருட்களை உணவுத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியை சுற்றியுள்ள கடைகளில் நடத்திய ஆய்வில், 200-க்கும் மேற்பட்ட கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பேசிய உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சோமசுந்தரம், "மக்கள் பலர் எவ்வித முன்னெச்சரிக்கையும், விழிப்புணர்வும் இன்றி தங்களின் குழந்தைக்கு காலாவதியான உணவு பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். இதனால் அக்குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள், உடல் நல சீர்கேடுகள் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் முன்பு குழந்தைகள் வாங்கி உண்ணும் தரமற்ற உணவுகள் குறித்தும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

மேலும் பேசிய அவர், மேல்தட்டு மக்கள் வாங்கும் கடைகள், கீழ்தட்டு மக்கள் வாங்கும் கடைகள் என்று பிரித்து சோதனை நடத்தியதாகவும் இருகடைகளிலுமே காலவாதியான பொருட்கள் விற்கப்படுவதாகவும் இது குறித்து உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

100 களங்களைப் பார்த்த ஜல்லிக்கட்டுக் காளை மரணம்: பொதுமக்கள் இறுதிச் சடங்கு!

Intro:*மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கசுமார் 20 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினரால் பறிமுதல்Body:*மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கசுமார் 20 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினரால் பறிமுதல்*

*டாக்டர் சோமசுந்தரம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;*

கடந்த தினம் மதுரை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முனிசாலை பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்பராக் போன்றவைகள் அனுமதியின்றி பள்ளிமாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்தபோது காலாவதியான உணவு திண்பண்டங்கள் மேல்தட்டு குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட் , இனிப்பு தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து கடையில் இருந்து சுமார் 20 லட்சம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

தொடர்ந்து இதுபோன்று 200-க்கும் மேற்பட்ட கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தொடர்ந்து மேல்தட்டு மக்கள் தங்களின் குழந்தைக்கு எவ்வித முன்னெச்சரிக்கையும், விழிப்புணர்வு இன்றி காலாவதியான கவர்ச்சிகரமான உணவு பொருட்களை வாங்கிக் கொடுப்பதால் வயிற்று உபாதைகள் மற்றும் உடல் நிலை சீர்கேடு முதலானவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் முன்பு குழந்தைகள் வாங்கி உண்ணும் தரமற்ற உணவுகள் குறித்தும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.