ETV Bharat / city

பாண்டியன் சிற்றணை: 'நீர் மேலாண்மைக்கான ஆயிரமாண்டு பழமையான அடையாளம்' - Interview with Archaeologist Chandalingam

நீர்ப்பாசன மேலாண்மையில் தமிழர்கள் எந்தளவிற்கு சிறந்து விளங்கினர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாய் இன்றளவும் திகழ்ந்துவருகிறது பாண்டியன் சிற்றணை. மதுரைக்கு அருகே வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தத் தடுப்பணை குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

பாண்டியன் சிற்றணை
பாண்டியன் சிற்றணை
author img

By

Published : Jan 29, 2020, 9:59 AM IST

மதுரை மாவட்டம் குருவித்துறை எனும் சிற்றூருக்கு அருகே வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிற்றணை மகத்தான நீர் மேலாண்மையின் அழியாத் தடமாகத் திகழ்கிறது. இச்சிற்றணை கி.பி. 1117ஆம் ஆண்டு பாண்டிய மன்னன் ஜடாவர்ம ஸ்ரீவல்லபன் காலத்தில் கட்டப்பட்டது. வெறும் கற்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட இந்த அணை பாண்டியன் அணை என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டுவருகிறது.

இந்த அணை குறித்து ஆய்வுசெய்து வரும் பொறியியல் மாணவரும், சமூக செயல்பாட்டாளருமான யோகேஷ் கார்த்திக் கூறுகையில், "வடக்கு தெற்காக ஓடிவரும் வைகை, இந்த இடத்தில் தீடிரென கிழக்கு மேற்காகத் திரும்புகிறது. இதனால் வைகையாற்றின் மணல் விளைநிலங்களில் வாரியிறைக்கப்படும் அபாயத்தைத் தடுக்கவும் இங்கிருந்து ஒரு கால்வாய் அமைத்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தென்கரை பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லவும் இந்தத் தடுப்பணை பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்டது" என்கிறார்.

பாண்டியன் சிற்றணை
பாண்டியன் சிற்றணை தோற்றம்

வைகையின் நேர் குறுக்காக இல்லாமல், சற்றே அரைவட்ட வடிவத்தில் அமைந்த இந்தத் தடுப்பணை, 500 மீட்டர் நீளமும் மூன்று மீட்டர் உயரமும் கொண்டதாகும். மணலை வடிகட்டி, தண்ணீர் வழக்கம்போல் ஆற்றில் வழிந்தோடும் வகையில் இந்த அணை உருவாக்கப்பட்டுள்ளது. அணையின் மேற்புறமாகச் செல்லும் தண்ணீர் கால்வாயில் ஓடுவதுடன் மீண்டும் ஆற்றுக்குள்ளே வழிந்தோடும் வகையில் மூன்று கண்களைக் கொண்ட மதகானது கருங்கற்களைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் சிற்றணை
குருவித்துறை கல்வெட்டு

மூத்தத் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறுகையில், "பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட இந்தக் கால்வாயின் மேற்புறம், புதிதாக ஒரு கால்வாயை விவசாயி ஒருவர் வெட்டியிருந்துள்ளார். இப்பிரச்னை மன்னனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. விசாரித்த பாண்டியன் ஏற்கனவே உள்ள காலுக்கு மேலாக மற்றொரு கால் வெட்டக்கூடாது என்று தீர்ப்பளிக்கிறார். 'காலுக்கு மேல் கால் கல்லலாகாது' என்ற அச்சட்டத்தின் கல்வெட்டு குருவித் துறை கோயில் கருவறை சுற்றுச்சுவரில் இன்றும் காணப்படுகிறது" என்கிறார்.

பாண்டியன் சிற்றணை
வைகை அணையின் குறுக்கே கட்டப்பட்ட மதகு

பாண்டியன் சிற்றணைக்காக தேவைப்பட்ட கற்களை உடைத்த இடத்தைப் பண்டைய காலத்தில் 'கற்களம்' என்று பெயரிட்டு அழைத்ததாக இப்பகுதியிலுள்ள கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும்கூட, அந்த வடிவமும் நோக்கமும் மாறாமல் அணை இப்போதும் பயன்பாட்டிலிருப்பதுதான் வியப்பிலும் வியப்பு.

'பாண்டியன் சிற்றணை' - சிறப்பு தொகுப்பு

அறிஞர் சாந்தலிங்கம் கூறுகையில், "வைகையைப் பொறுத்தவரை நீர் மேலாண்மையைப் பாண்டிய மன்னர்கள் எந்தளவிற்கு மிகச் சிறப்பாக மேற்கொண்டார்களோ, அதே அளவிற்கு அதில் எழுந்த சிக்கல்களுக்கும் மிகச் சிறந்த தீர்வினையும் முன்மொழிந்திருக்கிறார்கள். இதற்குரிய அனைத்துச் சான்றுகளும் குருவித்துறை பெருமாள் கோயில் கல்வெட்டுகளில் இன்றைக்கும் உள்ளன" என்றார்.

நம் முன்னோர் வகுத்தளித்த பல்வேறு தடங்களுள் பாண்டியன் சிற்றணையும் ஒன்று. மரபுகளை வியப்போடு நாம் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் அவற்றின் உள்ளீடாய்த் திகழ்கின்ற நியதிகள், நடைமுறைகள், சட்டங்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. நாம் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் அவற்றையும் உணர்ந்து கற்றுத் தெளிய வழி காண வேண்டும்.

இதையும் படிங்க:

உலகமே மெச்சும் கீழடி நீர் மேலாண்மை - தமிழ்நாடு தொல்லியல் துறை

மதுரை மாவட்டம் குருவித்துறை எனும் சிற்றூருக்கு அருகே வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிற்றணை மகத்தான நீர் மேலாண்மையின் அழியாத் தடமாகத் திகழ்கிறது. இச்சிற்றணை கி.பி. 1117ஆம் ஆண்டு பாண்டிய மன்னன் ஜடாவர்ம ஸ்ரீவல்லபன் காலத்தில் கட்டப்பட்டது. வெறும் கற்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட இந்த அணை பாண்டியன் அணை என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டுவருகிறது.

இந்த அணை குறித்து ஆய்வுசெய்து வரும் பொறியியல் மாணவரும், சமூக செயல்பாட்டாளருமான யோகேஷ் கார்த்திக் கூறுகையில், "வடக்கு தெற்காக ஓடிவரும் வைகை, இந்த இடத்தில் தீடிரென கிழக்கு மேற்காகத் திரும்புகிறது. இதனால் வைகையாற்றின் மணல் விளைநிலங்களில் வாரியிறைக்கப்படும் அபாயத்தைத் தடுக்கவும் இங்கிருந்து ஒரு கால்வாய் அமைத்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தென்கரை பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லவும் இந்தத் தடுப்பணை பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்டது" என்கிறார்.

பாண்டியன் சிற்றணை
பாண்டியன் சிற்றணை தோற்றம்

வைகையின் நேர் குறுக்காக இல்லாமல், சற்றே அரைவட்ட வடிவத்தில் அமைந்த இந்தத் தடுப்பணை, 500 மீட்டர் நீளமும் மூன்று மீட்டர் உயரமும் கொண்டதாகும். மணலை வடிகட்டி, தண்ணீர் வழக்கம்போல் ஆற்றில் வழிந்தோடும் வகையில் இந்த அணை உருவாக்கப்பட்டுள்ளது. அணையின் மேற்புறமாகச் செல்லும் தண்ணீர் கால்வாயில் ஓடுவதுடன் மீண்டும் ஆற்றுக்குள்ளே வழிந்தோடும் வகையில் மூன்று கண்களைக் கொண்ட மதகானது கருங்கற்களைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் சிற்றணை
குருவித்துறை கல்வெட்டு

மூத்தத் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறுகையில், "பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட இந்தக் கால்வாயின் மேற்புறம், புதிதாக ஒரு கால்வாயை விவசாயி ஒருவர் வெட்டியிருந்துள்ளார். இப்பிரச்னை மன்னனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. விசாரித்த பாண்டியன் ஏற்கனவே உள்ள காலுக்கு மேலாக மற்றொரு கால் வெட்டக்கூடாது என்று தீர்ப்பளிக்கிறார். 'காலுக்கு மேல் கால் கல்லலாகாது' என்ற அச்சட்டத்தின் கல்வெட்டு குருவித் துறை கோயில் கருவறை சுற்றுச்சுவரில் இன்றும் காணப்படுகிறது" என்கிறார்.

பாண்டியன் சிற்றணை
வைகை அணையின் குறுக்கே கட்டப்பட்ட மதகு

பாண்டியன் சிற்றணைக்காக தேவைப்பட்ட கற்களை உடைத்த இடத்தைப் பண்டைய காலத்தில் 'கற்களம்' என்று பெயரிட்டு அழைத்ததாக இப்பகுதியிலுள்ள கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும்கூட, அந்த வடிவமும் நோக்கமும் மாறாமல் அணை இப்போதும் பயன்பாட்டிலிருப்பதுதான் வியப்பிலும் வியப்பு.

'பாண்டியன் சிற்றணை' - சிறப்பு தொகுப்பு

அறிஞர் சாந்தலிங்கம் கூறுகையில், "வைகையைப் பொறுத்தவரை நீர் மேலாண்மையைப் பாண்டிய மன்னர்கள் எந்தளவிற்கு மிகச் சிறப்பாக மேற்கொண்டார்களோ, அதே அளவிற்கு அதில் எழுந்த சிக்கல்களுக்கும் மிகச் சிறந்த தீர்வினையும் முன்மொழிந்திருக்கிறார்கள். இதற்குரிய அனைத்துச் சான்றுகளும் குருவித்துறை பெருமாள் கோயில் கல்வெட்டுகளில் இன்றைக்கும் உள்ளன" என்றார்.

நம் முன்னோர் வகுத்தளித்த பல்வேறு தடங்களுள் பாண்டியன் சிற்றணையும் ஒன்று. மரபுகளை வியப்போடு நாம் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் அவற்றின் உள்ளீடாய்த் திகழ்கின்ற நியதிகள், நடைமுறைகள், சட்டங்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. நாம் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் அவற்றையும் உணர்ந்து கற்றுத் தெளிய வழி காண வேண்டும்.

இதையும் படிங்க:

உலகமே மெச்சும் கீழடி நீர் மேலாண்மை - தமிழ்நாடு தொல்லியல் துறை

Intro:பாண்டியன் சிற்றணை - நீர் மேலாண்மைக்கான ஆயிரமாண்டு பழமையான மதுரையின் அடையாளம்

நீர்ப்பாசன மேலாண்மையில் தமிழர்கள் எந்தளவிற்கு சிறந்து விளங்கினர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாய் வாழும் சான்றாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது பாண்டியன் சிற்றணை. மதுரைக்கு அருகே வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த இந்தத் தடுப்பணை குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.Body:பாண்டியன் சிற்றணை - நீர் மேலாண்மைக்கான ஆயிரமாண்டு பழமையான மதுரையின் அடையாளம்

நீர்ப்பாசன மேலாண்மையில் தமிழர்கள் எந்தளவிற்கு சிறந்து விளங்கினர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாய் வாழும் சான்றாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது பாண்டியன் சிற்றணை. மதுரைக்கு அருகே வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த இந்தத் தடுப்பணை குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

இயற்கையாகவே மழை மறைவுப் பிரதேசமாய்த் திகழ்கின்ற தமிழகத்தின் பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் தண்ணீரைச் சேமித்து வாழ்ந்தார்கள் என்பதை அறியும்போது வியப்புதான் மேலிடுகிறது. கரிகால் பெருவளத்தானின் கல்லணை தொடங்கி, கண்மாய், ஏரி, குளம் என நீரைக் கட்டி வாழ்ந்த தொழில்நட்பங்கள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

மதுரை மாவட்டம் குருவித்துறை எனும் சிற்றூருக்கு அருகே வைகையாற்றின் குறுக்கே கி.பி.1117-ஆம் ஆண்டு பாண்டிய மன்னன் ஜடாவர்ம ஸ்ரீவல்லபன் காலத்தில் கட்டப்பட்ட சிற்றணை மகத்தான நீர் மேலாண்மையின் அழியா தடமாகத் திகழ்கிறது. வெறும் கற்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட இந்த அணை பாண்டியன் அணை என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த அணை குறித்து ஆய்வு செய்து வரும் பொறியியல் மாணவரும், சமூக ஆர்வலருமான யோகேஷ் கார்த்திக் கூறுகையில், 'வடக்கு தெற்காக ஓடி வரும் வைகை, இந்த இடத்தில் திடுமென கிழக்கு மேற்காகத் திரும்புகிறது. இதனால் வைகையாற்றின் மணல் விளைநிலங்களில் வாரியிறைக்கப்படும் அபாயத்தைத் தடுக்கவும், இங்கிருந்து ஒரு கால் அமைத்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தென்கரை பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லவும் இந்த தடுப்பணை பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்டது' என்கிறார்.

வைகையின் நேர் குறுக்காக அன்றி, சற்றே அரைவட்ட வடிவத்தில் அமைந்த இந்த தடுப்பணை, 500 மீ நீளமும் மூன்று மீட்டர் உயரமும் கொண்டதாகும். மணலை வடிகட்டி, தண்ணீர் வழக்கம்போல் ஆற்றில் வழிந்தோடும் வகையில் இந்த அணை உருவாக்கப்பட்டுள்ளது. அணையின் மேற்புறமாகச் செல்லும் தண்ணீர் கால்வாயில் ஓடுவதுடன் மீண்டும் ஆற்றுக்குள்ளே வழிந்தோடும் வகையில் மூன்று கண்களைக் கொண்ட மதகும் கருங்கற்களைக் கொண்டே அமைத்துள்ளனர்.

மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறுகையில், 'பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட கால்வாயில் மேற்புறம், புதிதாக ஒரு கால்வாயை விவசாயி ஒருவர் வெட்டியிருக்கிறான். இப்பிரச்சனை மன்னனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. விசாரித்த பாண்டியன் ஏற்கனவே உள்ள காலுக்கு மேலாக மற்றொரு கால் வெட்டக்கூடாது என்று தீர்ப்பளிக்கிறான். 'காலுக்கு மேல் கால் கல்லலாகாது' என்ற அச்சட்டத்தின் கல்வெட்டு குருவித்துறை கோவில் கருவறை சுற்றுச்சுவரில் இன்றும் காணப்படுகிறது' என்கிறார்.

பாண்டியன் சிற்றணைக்காக தேவைப்பட்ட கற்களை உடைத்த இடத்தைக் குறித்து இன்றைக்கு நாம் கல்குவாரி என்று அழைக்கின்றோமே அதைப் போன்று பண்டைய காலத்தில் 'கற்களம்' என்று பெயரிட்டு அழைத்ததாக இப்பகுதியிலுள்ள கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும்கூட, அந்த வடிவமும், நோக்கமும் மாறாமல் அணை இப்போதும் பயன்பாட்டிலிருப்பதுதான் வியப்பிலும் வியப்பு.

அறிஞர் சாந்தலிங்கம் கூறுகையில், 'வைகையைப் பொறுத்தவரை நீர் மேலாண்மையை பாண்டிய மன்னர்கள் எந்தளவிற்கு மிகச் சிறப்பாக மேற்கொண்டார்களோ, அதே அளவிற்கு அதில் எழுந்த சிக்கல்களுக்கும் மிகச் சிறந்த தீர்வினையும் முன்மொழிந்திருக்கிறார்கள். இதற்குரிய அனைத்துச் சான்றுகளும் குருவித்துறை பெருமாள் கோவில் கல்வெட்டுகளில் இன்றைக்கும் உள்ளன' என்றார்.

நம் முன்னோர் வகுத்தளித்த பல்வேறு தடங்களுள் பாண்டியன் சிற்றணையும் ஒன்று. மரபுகளை வியப்பதோடு நாம் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் அவற்றின் உள்ளீடாய்த் திகழ்கின்ற நியதிகளையும், நடைமுறைகளையும், சட்டங்களையும் அறிந்து கொள்ள நாம் ஆர்வம் காட்டுவதில்லை. நாம் மட்டுமன்றி... வருங்காலத் தலைமுறையினரும் அவற்றையும் உணர்ந்து கற்றுத் தெளிய வழி காண வேண்டும்... ஆம்... இனியொரு விதி செய்வோம்...

ஈடிவி பாரத் செய்திகளுக்காக மதுரையிலிருந்து செய்தியாளர் இரா.சிவக்குமார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.