ETV Bharat / city

பேருந்து - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Nov 23, 2019, 12:50 PM IST

Updated : Nov 23, 2019, 2:19 PM IST

மதுரை: திருமங்கலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த மூன்று புகைப்படக் கலைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

புகைப்படக் கலைஞர்கள் மூன்று பேர் உயிரிப்பு

திருமங்கலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குளம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசுப் பேருந்தும் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற சிவப்பு ஹூண்டாய் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் கடுமையாக சேதமடைந்ததில் அதில் பயணித்த மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு துறையினரும் நெடுஞ்சாலை பாதுகாப்பு காவல்துறையினரும் விரைந்து வந்து உயிரிழந்த நபர்களின் உடலைகளை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.

விபத்து நிகழ்ந்த இடம்

விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் திருமங்கலத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார் (26,) மதுரை பொன்மேனியைச் சேர்ந்த தினேஷ் (26) மற்றும் குணா (23) என்றும் மேலும் அவர்கள் மூவரும் புகைப்படக் கலைஞர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதில் தினேஷ் அவரது நண்பர்களுடன் நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு மதுரையிலிருந்து பிரசன்னகுமாரை திருமங்கலத்தில் இறக்கி விடுவதற்காக காரில் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகிறது.

மேலும் படிக்க: கார் - லாரி சாலைவிபத்து - இருவர் உயிரிழந்த சோகம்

திருமங்கலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குளம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசுப் பேருந்தும் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற சிவப்பு ஹூண்டாய் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் கடுமையாக சேதமடைந்ததில் அதில் பயணித்த மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு துறையினரும் நெடுஞ்சாலை பாதுகாப்பு காவல்துறையினரும் விரைந்து வந்து உயிரிழந்த நபர்களின் உடலைகளை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.

விபத்து நிகழ்ந்த இடம்

விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் திருமங்கலத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார் (26,) மதுரை பொன்மேனியைச் சேர்ந்த தினேஷ் (26) மற்றும் குணா (23) என்றும் மேலும் அவர்கள் மூவரும் புகைப்படக் கலைஞர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதில் தினேஷ் அவரது நண்பர்களுடன் நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு மதுரையிலிருந்து பிரசன்னகுமாரை திருமங்கலத்தில் இறக்கி விடுவதற்காக காரில் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகிறது.

மேலும் படிக்க: கார் - லாரி சாலைவிபத்து - இருவர் உயிரிழந்த சோகம்

Intro:அரசுப் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் புகைப்படக் கலைஞர்கள் 3 பேர் பலி -Body:அரசுப் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் புகைப்படக் கலைஞர்கள் 3 பேர் பலி -


திருமங்கலம் அருகே அதிகாலையில் நடந்த சோகம்
திருமங்கலம் அருகே இன்று அதிகாலை அரசு பேருந்து காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மதுரை மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
திருமங்கலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குளம் அருகே இன்று அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தும் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த ஹூண்டாய் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சம்பவம் குறித்து தகவலறிந்த மதுரை தீயணைப்பு துறையினரும் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு துறையினரும் நெடுஞ்சாலை பாதுகாப்பு போலீசாரும் விபத்தில் காரில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் அதிகாலை நடந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இது விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர்களில் இரண்டு பேர் அடையாளம் தெரிந்தது திருமங்கலத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார் (26) மதுரை பொன்மேனியைத் சேர்ந்த தினேஷ் (26) குணா (23) .மூன்று பேரும் புகைப்பட கலைஞர்கள் எனவும் இதில் தினேஷ் மற்றும் நண்பர்களுடன் நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாடி விட்டு மதுரையிலிருந்து பிரசன்னகுமாரை திருமங்கலத்தில் இறக்கி விடுவதற்காக காரில் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர் மேலும் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலையில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று புகைப்பட கலைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
Last Updated : Nov 23, 2019, 2:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.