ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக எளிதில் வெற்றி பெறும்: ராஜன் செல்லப்பா பேட்டி

author img

By

Published : Nov 30, 2019, 7:28 PM IST

மதுரை: உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகவும், தேர்தலில் அதிமுக எளிதில் வெற்றி பெறும் எனவும் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

The AIADMK will easily win the local body elections says MLA Rajan chellappa
The AIADMK will easily win the local body elections says MLA Rajan chellappa

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு, ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, ‘தமிழ்நாட்டில் மாவட்டங்கள் 37 ஆக உயர்ந்திருக்கிறது. 6 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அரசு ஆணைகள் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆகவே இனிவரும் தேர்தல்களில் அதிமுக எளிதாக வெற்றி பெறும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் தேவைக்கேற்ற அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளாட்சி வார்டுகள் முறையாக வரையறுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டி

உள்ளாட்சித் தேர்தலுக்காக பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால் பொங்கல் பரிசு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுவிடும். ஆகவே முன்னரே பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை தடுக்க திமுக நினைக்கவில்லை - உதயநிதி ஸ்டாலின்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு, ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, ‘தமிழ்நாட்டில் மாவட்டங்கள் 37 ஆக உயர்ந்திருக்கிறது. 6 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அரசு ஆணைகள் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆகவே இனிவரும் தேர்தல்களில் அதிமுக எளிதாக வெற்றி பெறும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் தேவைக்கேற்ற அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளாட்சி வார்டுகள் முறையாக வரையறுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டி

உள்ளாட்சித் தேர்தலுக்காக பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால் பொங்கல் பரிசு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுவிடும். ஆகவே முன்னரே பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை தடுக்க திமுக நினைக்கவில்லை - உதயநிதி ஸ்டாலின்

Intro:உள்ளாட்சி தேர்தலுக்காக பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் பொங்கல் பரிசு வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்பதற்காகவே முன்னரே பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேட்டிBody:உள்ளாட்சி தேர்தலுக்காக பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் பொங்கல் பரிசு வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்பதற்காகவே முன்னரே பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேட்டி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மூன்றாவது நினைவு தினம் வருவதையொட்டி ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதனை அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா துவங்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுகையில்:

தமிழகத்தில் 37 மாவட்டங்கள் ஆக உயர்ந்திருக்கிறது, 6 மருத்துவகல்லூரியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் பல அரசு ஆணைகள் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தி கொடுத்திருக்கிறோம் எனவே இனிவரும் தேர்தல்களில் அதிமுக எளிதாக வெற்றி பெறும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் தேவைக்கேற்ற அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளாட்சி வார்டுகள் முறையாக வரையறுக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சித் தேர்தலை கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.

உள்ளாட்சித்துறை தேர்தலை தள்ளிப்போடுதல் அதிமுகவுக்கு எந்த விருப்பம் இல்லை.

உள்ளாட்சி தேர்தலுக்காக பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் பொங்கல் பரிசு வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்பதற்காகவே முன்னரே பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.