ETV Bharat / city

’மோடியின் திட்டங்கள் இந்தியாவை சாம்பலாக்குகிறது’ - மோடியை தாக்கும் தா பாண்டியன்

மதுரை: மோடியின் திட்டங்கள் தீபாவளி பட்டாசுபோல ஒரு நொடியில் இந்தியாவையே சாம்பலாக்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் விமர்சித்துள்ளார்.

tha pandian
author img

By

Published : Oct 17, 2019, 10:00 PM IST

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன், "மோடி அரசின் பொருளாதார நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை மேலும் கீழே இழுத்துச் செல்வதாக உள்ளது. மிகப்பெரிய தொழிற்சாலைகளிலும் கூட வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பணம் என்பது நாட்டுக்கான பணம். ஆனால் அதனை மோடி அரசு பெற்றிருக்கிறது. அது குறித்து அவர் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

தீபாவளி பட்டாசு எப்படி ஒரு நொடியில் சாம்பலாகிவிடுமோ, அதேபோல மோடியின் திட்டங்கள் இந்தியாவையே சாம்பாலாக்குகிறது. பொருளாதார சீரழிவால் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன” என்றார்.

தா. பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு

சீமான் நாவடக்கத்தோடு பேச வேண்டும் என்று கூறிய அவர், கொலை செய்வதை நியாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். சீமான் இதேபோல பேசிவந்தால் ஈழம்போல தமிழ்நாட்டிலும் சகோதர படுகொலைகள் ஏற்படும் அபாயம் உருவாகும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: இயக்குநர் வெற்றிமாறன் மீதான தேச துரோக வழக்கு: யார் இந்த ஏபி சாஹி?

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன், "மோடி அரசின் பொருளாதார நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை மேலும் கீழே இழுத்துச் செல்வதாக உள்ளது. மிகப்பெரிய தொழிற்சாலைகளிலும் கூட வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பணம் என்பது நாட்டுக்கான பணம். ஆனால் அதனை மோடி அரசு பெற்றிருக்கிறது. அது குறித்து அவர் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

தீபாவளி பட்டாசு எப்படி ஒரு நொடியில் சாம்பலாகிவிடுமோ, அதேபோல மோடியின் திட்டங்கள் இந்தியாவையே சாம்பாலாக்குகிறது. பொருளாதார சீரழிவால் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன” என்றார்.

தா. பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு

சீமான் நாவடக்கத்தோடு பேச வேண்டும் என்று கூறிய அவர், கொலை செய்வதை நியாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். சீமான் இதேபோல பேசிவந்தால் ஈழம்போல தமிழ்நாட்டிலும் சகோதர படுகொலைகள் ஏற்படும் அபாயம் உருவாகும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: இயக்குநர் வெற்றிமாறன் மீதான தேச துரோக வழக்கு: யார் இந்த ஏபி சாஹி?

Intro:மோடியின் திட்டங்கள் தீபாவளி பட்டாசு போல ஒரு நொடியில் சாம்பலாகிவிடும் ,சீமான் போன்று பேசி வந்தால் ஈழம் போல தமிழகத்திலும் சகோதர படுகொலைகள் உண்டாகும் மதுரையில் தா.பாண்டியன் பேட்டிBody:மோடியின் திட்டங்கள் தீபாவளி பட்டாசு போல ஒரு நொடியில் சாம்பலாகிவிடும் ,சீமான் போன்று பேசி வந்தால் ஈழம் போல தமிழகத்திலும் சகோதர படுகொலைகள் உண்டாகும் மதுரையில் தா.பாண்டியன் பேட்டி

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பேசியபோது :

வடகிழக்கு பருவமழை நீரை வீணாக்காமல் தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கான இடுபொருள் விலை உயர்ந்துள்ளது, உரிய உரங்கள் கிடைப்பதில்லை, மோடி அரசின் பொருளாதார நடவடிக்கை இந்தியா பொருளாதாரத்தில் கீழே செல்லும் நிலை உள்ளது, மிகப்பெரிய தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுத்தியுள்ளது, ரிசர்வ் வங்கி நாட்டுக்கான பணம் அதனை மோடி அரசு பெற்றிருக்கிறது, அது குறித்து விளக்கம் அளிக்கவில்லை மோடியின் திட்டங்கள் தீபாவளி பட்டாசு போல ஒரு நொடியில் சாம்பலாக்கிவிடும் , இந்தியாவையே சாம்பாலாக்குகிறது எனவும் இந்திய பொருளாதார சீரழிவால் தற்கொலைகள் அதிகரித்துள்ளது, கீழடி தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரீகம் என்பதை நிருபித்துள்ளது, பாஜகவை கருத்தளவில் மக்கள் அளவில் தமிழகத்திற்குள் நுழைய விடகூடாது, ராஜீவ்காந்தி படுகொலையை நேரில் பார்த்தவன் நான் தான், நான் மட்டுமே அருகில் இருந்தேன், ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட வேண்டாம், சீமான் நாவடக்கத்தோடு பேச வேண்டும், கொலை செய்வதை நியாயப்படுத்துவது கண்டிக்கதக்கது, சீமான் போன்று பேசி வந்தால் ஈழம் போல தமிழகத்திலும் சகோதர படுகொலைகள் ஏற்படும் அபாயம் உருவாகும் எனவும், முதல்வர் எடப்பாடிக்கு கௌரவ டாக்டர் பட்டம் என்பது மாலை போடுவது போல தான், எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதால் பல்கலைக்கழகத்திற்கு எதோ வேண்டி உள்ளது என்பது தான் காரணம், பிரபாகரன் அஞ்சலி கூட்டம் கூட்டாத மறைந்த தலைவர் இதை சொன்னால் எதிர்ப்பு வருகிறது, பிரபாகரன் இறப்பு குறித்து தவறான தகவல்களை மக்களுக்கு பரப்ப வேண்டாம் என்றார் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி சகல ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது எனவும் குற்றச்சாட்டினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.