ETV Bharat / city

'தமிழ்நாட்டில் இனி தற்கொலைகள் நிகழக் கூடாது' - மாணவர்களுக்கு தமிழிசை உருக்கமான வேண்டுகோள்

author img

By

Published : Nov 17, 2019, 9:41 AM IST

Updated : Nov 17, 2019, 11:04 AM IST

மதுரை: தற்கொலை என்பது நிரந்தரத் தீர்வல்ல எனவும்; சவாலான சூழ்நிலைகளை சமாளிக்கக் கூடிய மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் எனவும் கல்லூரி விழாவில் மாணவர்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tamilisai

மதுரையில் தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவம் சார்ந்த துறைகளில் சாதனை புரிந்தோர்களுக்கு, தொடர்ந்து 2 ஆண்டுகளாக விருது தரப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டுக்கான போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து பலப் போட்டியாளர்கள் பங்கேற்று, மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்று, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு தமிழ்நாட்டின் தலை சிறந்த முதலமைச்சர்களாகக் கருதப்படும் காமராஜர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், P.S. குமாரசாமி ராஜா ஆகியோர் பெயரில் விருதுகளுடன் தலா இரண்டு லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இவ்விழாவை தலைமையேற்று நடத்திய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கிப் பேசினார்.

விழாவில் பேசிய தமிழிசை, 'மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கான பரிசு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். கனவுகள் தூங்கும் பொழுது வருவது, லட்சியம் தூங்கவிடாமல் வருவது என விவேகானந்தர் கூறியுள்ளார். அரசியல்வாதி மகள் என்பதால், நான் எளிதாக மருத்துவம் படித்து முடித்தேன் என நினைக்க வேண்டாம். கடுமையான உழைப்பால் தான் மருத்துவராக இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், 'வாழ்க்கை என்பது சாதாரணம் விஷயம் கிடையாது. அரசியல் என்பது பொதுவாக ஆண்களின் உலகம். அதில் பெண்ணாக வளர்வது என்பது சாத்தியமற்றது. கடுமையானச் சவால்களை சந்தித்துதான் நாங்கள் இந்த நிலையை அடைந்திருக்கிறோம்' என்றார்.

விழாவில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை

மேலும், 'படிக்கும் போது மாணவ மாணவிகள் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தப் பிரச்னைகளை எதிர்கொள்வது தான் வாழ்க்கை நமது அம்மாவும் அப்பாவும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுதான் நம்மை படிக்க அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை சாதிப்பதைத்தான் குறிக்கோளாக கொள்ள வேண்டுமே தவிர, இடையில் வரும் சவால்களை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்யக் கூடாது' எனக் கேட்டுக்கொண்டார்.

ஐ.ஐ.டி.பாத்திமா லத்தீஃப் தற்கொலை சம்பவம் குறித்து இவ்வாறு மறைமுகக் கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, ' எவ்வளவு பெரும் சவாலான சூழ்நிலைகள் இருந்தாலும் அதனைச் சமாளிக்க கூடிய மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் எந்த தற்கொலையும் நடைபெறக் கூடாது' எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: திமுகவை யாராலும் அழிக்க முடியாது - திமுக பொருளாளர் துரைமுருகன்

மதுரையில் தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவம் சார்ந்த துறைகளில் சாதனை புரிந்தோர்களுக்கு, தொடர்ந்து 2 ஆண்டுகளாக விருது தரப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டுக்கான போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து பலப் போட்டியாளர்கள் பங்கேற்று, மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்று, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு தமிழ்நாட்டின் தலை சிறந்த முதலமைச்சர்களாகக் கருதப்படும் காமராஜர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், P.S. குமாரசாமி ராஜா ஆகியோர் பெயரில் விருதுகளுடன் தலா இரண்டு லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இவ்விழாவை தலைமையேற்று நடத்திய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கிப் பேசினார்.

விழாவில் பேசிய தமிழிசை, 'மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கான பரிசு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். கனவுகள் தூங்கும் பொழுது வருவது, லட்சியம் தூங்கவிடாமல் வருவது என விவேகானந்தர் கூறியுள்ளார். அரசியல்வாதி மகள் என்பதால், நான் எளிதாக மருத்துவம் படித்து முடித்தேன் என நினைக்க வேண்டாம். கடுமையான உழைப்பால் தான் மருத்துவராக இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், 'வாழ்க்கை என்பது சாதாரணம் விஷயம் கிடையாது. அரசியல் என்பது பொதுவாக ஆண்களின் உலகம். அதில் பெண்ணாக வளர்வது என்பது சாத்தியமற்றது. கடுமையானச் சவால்களை சந்தித்துதான் நாங்கள் இந்த நிலையை அடைந்திருக்கிறோம்' என்றார்.

விழாவில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை

மேலும், 'படிக்கும் போது மாணவ மாணவிகள் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தப் பிரச்னைகளை எதிர்கொள்வது தான் வாழ்க்கை நமது அம்மாவும் அப்பாவும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுதான் நம்மை படிக்க அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை சாதிப்பதைத்தான் குறிக்கோளாக கொள்ள வேண்டுமே தவிர, இடையில் வரும் சவால்களை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்யக் கூடாது' எனக் கேட்டுக்கொண்டார்.

ஐ.ஐ.டி.பாத்திமா லத்தீஃப் தற்கொலை சம்பவம் குறித்து இவ்வாறு மறைமுகக் கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, ' எவ்வளவு பெரும் சவாலான சூழ்நிலைகள் இருந்தாலும் அதனைச் சமாளிக்க கூடிய மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் எந்த தற்கொலையும் நடைபெறக் கூடாது' எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: திமுகவை யாராலும் அழிக்க முடியாது - திமுக பொருளாளர் துரைமுருகன்

Intro:
*தற்கொலை என்பது நிரந்தர தீர்வல்ல, தற்காலிகத் தீர்வுதான். எவ்வளவு பெரும் சவாலான சூழ்நிலைகள் இருந்தாலும் அதனை சமாளிக்க கூடிய மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.* - *தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு*


வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சென்ற ஆண்டு முதல் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், புதிய செயல்முறைகளுக்கும் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இதில் மருத்துவம் சார்ந்த துறைகளில் சாதனை புரிந்தோர்களுக்கு "Velammal Healthcare Innovation Awards" தொடர்ந்து 2 ஆண்டாக இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து பல போட்டியாளர்கள் பங்கேற்று, மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்று ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு தமிழகத்தில் தலை சிறந்து விளங்கிய முதல்வர்கள் காமராஜர், ஓம்ந்தூர் இராமசாமி ரெட்டியார், P.S.குமாரசாமி ராஜா ஆகியோர் பெயரில் விருதுகளுடன் தலா இரண்டு லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு விருதுகள் வழங்கினார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் மேடையில் பேசும் பொழுது

அனைவருக்கும் வணக்கம்...

இந்த காலத்தில் விவேகம் கூட தேவையில்லை வேகம் தான் தேவை.

மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கான பரிசு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவேகானந்தர் கூறும் போது கனவுகள் தூங்கும் பொழுது வரும் - லட்சியம் என்பது தூங்கவிடாமல் வருவது

அரசியல்வாதி மகள் என்பதால் நான் ஈசியாக மருத்துவம் படித்து முடிக்கவில்லை கடமையாக உழைப்பால் தான் மருத்துவராக இருக்கிறேன்.

தற்போது படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா இல்லை மருத்துவராக வேண்டும் என நினைக்கிறீர்களா

நீங்கள் படிக்கும் ஒவ்வொரு நாட்களையும் வீணாக்க போகிறீர்களா இல்லை படிக்க போகிறார்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நோயாளியின் மருத்துவம் பார்க்கும் போது நோயின் தன்மை பற்றி முழுமையாக ஆராய்ச்சி சென்று பின்பே மருத்துவம் செய்வேன்.

மாணவர்கள் அன்று ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை அன்றன்றே படிக்க வேண்டும்.

தேர்வுக்கு முன்னால் படிப்பது நன்மை கிடையாது. எனவே என்னுடைய அறிவுரை என்னவென்றால் மாணவர்களுக்கு அன்றன்று பாடங்களை அன்றே படிக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது சாதாரணம் கிடையாது நாங்கள் மேடையில் நின்று கொண்டிருக்கிறோம் என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது

அரசியல் என்பது ஆண்கள் இருக்கலாம் அதில் ஒரு பெண் இருக்கிறோம் என்றால் அது மிக கடினம்.

திமிகலம் இல்லாத கடலில் நீந்த பிடிக்காது

படிக்கும் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் தஞ்சாவூரில் நானும் படித்த மாணவி தான் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வது தான் வாழ்க்கை நமது அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மை படிக்க அனுப்பி இருக்கிறார்கள்.

.Body:அல்ட்ரா சவுண்ட் நிபுணர் என்ற முறையில் கூறுகிறேன் முதல் 2 inch குழந்தை இதயத் துடிப்பை காண்பிக்கும் பொழுது அந்த அம்மா எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் என்பது தெரியுமா அதற்காகவே காண்பிப்பேன் உங்கள் குழந்தை இரண்டு சென்டிமீட்டர் தான் இருக்கிறது அதில் ஒரு உயிர் துடிப்பு இருக்கிறது என்று அதனை பார்த்து மகிழும் அம்மாக்களை நான் பார்த்திருக்கிறேன் உங்களை இந்த பள்ளிக்கோ கல்லூரிக்கோ அனுப்புவதற்கு உங்கள் தந்தை எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் தயவு செய்து அவர்களை வளர்ப்பது மிக சவாலான சூழலைஎதிர் கொண்டு அவர்கள் என்ன நினைத்தார்களோ அதை சாதிப்பதற்காக தவிர இடையில் வரும் சவால்களை எதிர் கொள்வது முடியாமல் தற்கொலை செய்ய கூடாது.

இனி தமிழகத்தில் எந்த தற்கொலையும் நடைபெறக் கூடாது என்பது என் வேண்டுகோள்.

இந்த கல்லூரி மட்டும் இல்லை அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது சவால்களைத் தாண்டி முன்னேறிய பெண் என்பதை முன்வைத்து நான் பேசுகிறேன்.

ஆகையால் அனைத்து வித வாய்ப்புகளையும் பயன்படுத்தினால் மாபெரும்பதவி வகிக்கவும் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

கல்வியை பொறுத்தவரையில் உற்சாகமாக பயில வேண்டும். தெரியாதவற்றை தேடி ஆராய்ச்சி செய்து அதனை முழுமையாகக் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்காக எந்தவித சமரசமும் செய்யவேண்டியது தேவையில்லை. ஆராய்ச்சி மூலம் புதுப்புது கண்டுபிடிப்புகள்

*மாணவ குழந்தைகளுக்கும் ஒரே வேண்டுகோள் மட்டும்தான்.*

அரசியல் என்பது சாதாரணமாக ஆண்களின் உலகம். அதில் பெண்ணாக வளர்வது என்பது சாத்தியமற்றது. சவாலான சூழ்நிலையை எதிர்த்து போராடாமல் பெற்றோர்களின் கனவு நிறைவேற்றுவதற்காக சமாதானச் சூழ்நிலையில் சந்தித்து போராட வேண்டும். இனிமேல் எந்த ஒரு தற்கொலையை நடைபெற கூடாது.

தற்கொலை என்பது நிரந்தர தீர்வல்ல, தற்காலிகத் தீர்வுதான். எவ்வளவு பெரும் சவாலான சூழ்நிலைகள் இருந்தாலும் அதனை சமாளிக்க கூடிய மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும்Conclusion:
Last Updated : Nov 17, 2019, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.