ETV Bharat / city

பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு - பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரிய வழக்கினை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வருகிற ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா வழக்கு ஒத்திவைப்பு
பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா வழக்கு ஒத்திவைப்பு
author img

By

Published : Jan 21, 2020, 10:04 PM IST


தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "தஞ்சையில் காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ளது பிரகதீஸ்வரர் கோயில். இந்த கோயிலின் கட்டடக் கலையை கண்டு வியந்த, யுனெஸ்கோ அமைப்பு, இதை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் செய்தது. 1997ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி இந்த கோயிலில் சமஸ்கிருத மொழியில் பிரதிஷ்டை விழா நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 48 பேர் கொல்லப்பட்டனர்.

மதுரை உயர்நீதிமன்ற கிளை

மேலும் வழிபாட்டாளர்கள் மீது விழுந்த கூரையிலிருந்து 37 சடலங்கள் மீட்கப்பட்டதாக காவல் துறையினரின் அறிக்கை தெரிவிக்கிறது.1998ஆம் ஆண்டுக்குப் பிறகு 2010ஆம் ஆண்டில் எந்தவொரு பிரதிஷ்டையும் நடத்தப்படவில்லை. வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும்" என கூறியிருந்தார் .

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு விழாவை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க;

காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதி வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு


தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "தஞ்சையில் காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ளது பிரகதீஸ்வரர் கோயில். இந்த கோயிலின் கட்டடக் கலையை கண்டு வியந்த, யுனெஸ்கோ அமைப்பு, இதை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் செய்தது. 1997ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி இந்த கோயிலில் சமஸ்கிருத மொழியில் பிரதிஷ்டை விழா நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 48 பேர் கொல்லப்பட்டனர்.

மதுரை உயர்நீதிமன்ற கிளை

மேலும் வழிபாட்டாளர்கள் மீது விழுந்த கூரையிலிருந்து 37 சடலங்கள் மீட்கப்பட்டதாக காவல் துறையினரின் அறிக்கை தெரிவிக்கிறது.1998ஆம் ஆண்டுக்குப் பிறகு 2010ஆம் ஆண்டில் எந்தவொரு பிரதிஷ்டையும் நடத்தப்படவில்லை. வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும்" என கூறியிருந்தார் .

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு விழாவை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க;

காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதி வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

Intro:தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் தமிழில் நடத்தக் கோரிய வழக்கினை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு
Body:தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் தமிழில் நடத்தக் கோரிய வழக்கினை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு

ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்தார்,

அதில்,"
4. தஞ்சை பெருவுடையார் கோவில் ப்ரிஹதோஸ்வரர் கோயில் அல்லது ராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது, இது தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும், இந்த கோயில் UNESCO , UE நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் ஒரு பகுதியாகும். 1997 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி பிரஹதீஷ்வரர் கோயிலின் பிரதிஷ்டை விழாவில் சமஸ்கிருத மொழியில் பிரதிஷ்டை விழா நடத்தப்பட்டபோது ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.கோயிலுக்கு அருகே எரிந்த பட்டாசு, சடங்கு விழாக்களுக்கு இடமளிக்கும் வகையில் கட்டப்பட்ட ஒரு தற்காலிக கட்டமைப்பான யாகசாலை மீது விழுந்தது, மேலும் அது கூரைகளுக்கு பரவிய நெருப்பைத் தூண்டியது, பீதியடைந்த பக்தர்கள் ஒரே நுழைவாயிலுக்கு விரைந்தபோது ஒரு முத்திரை ஏற்பட்டது.மொத்தம் 48 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் வழிபாட்டாளர்கள் மீது விழுந்த கூரையிலிருந்து 37 சடலங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது.1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2010 ஆம் ஆண்டில் எந்தவொரு பிரதிஷ்டையும் நடத்தப்படவில்லை .


வருகிற பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும்" என கூறியிருந்தார் .

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு விழாவை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.