தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "தஞ்சையில் காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ளது பிரகதீஸ்வரர் கோயில். இந்த கோயிலின் கட்டடக் கலையை கண்டு வியந்த, யுனெஸ்கோ அமைப்பு, இதை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் செய்தது. 1997ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி இந்த கோயிலில் சமஸ்கிருத மொழியில் பிரதிஷ்டை விழா நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 48 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் வழிபாட்டாளர்கள் மீது விழுந்த கூரையிலிருந்து 37 சடலங்கள் மீட்கப்பட்டதாக காவல் துறையினரின் அறிக்கை தெரிவிக்கிறது.1998ஆம் ஆண்டுக்குப் பிறகு 2010ஆம் ஆண்டில் எந்தவொரு பிரதிஷ்டையும் நடத்தப்படவில்லை. வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும்" என கூறியிருந்தார் .
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு விழாவை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க;
காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதி வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு