ETV Bharat / city

வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் வருமானவரித் துறை சோதனை

author img

By

Published : Jan 21, 2020, 9:53 PM IST

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்ககூடிய வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் பாதிக்காத வகையில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலம்மாள் கல்வி நிறுவனம்
வேலம்மாள் கல்வி நிறுவனம்


சென்னை, மதுரை, திருச்சி, கரூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலம்மாள் குழுமத்திற்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுமத்தினர் மாணவ - மாணவியரிடம் அதிகப்படியான கட்டணங்களை வசூலித்து கல்விக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

மேலும் கடந்த சில வருடங்களாகவே வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இதன் அடிப்படையில் தற்போது வருமானவரித் துறை அலுவலர்கள் வேலம்மாள் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலம்மாள் கல்வி நிறுவனம்

இன்று காலையில் தொடங்கிய இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், சோதனையானது நாளைவரை நடைபெறலாம் என்றும் அலுவலர்களின் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து தேனி மற்றும் மதுரையில் உள்ள கல்வி நிறுவனங்களில் வகுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சோதனை மேற்கொண்டதாக அலுவலர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:

ராஜீவ் கொலை வழக்கு: ஆறாவது முறையாக ஆஜராகும் முருகன்


சென்னை, மதுரை, திருச்சி, கரூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலம்மாள் குழுமத்திற்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுமத்தினர் மாணவ - மாணவியரிடம் அதிகப்படியான கட்டணங்களை வசூலித்து கல்விக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

மேலும் கடந்த சில வருடங்களாகவே வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இதன் அடிப்படையில் தற்போது வருமானவரித் துறை அலுவலர்கள் வேலம்மாள் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலம்மாள் கல்வி நிறுவனம்

இன்று காலையில் தொடங்கிய இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், சோதனையானது நாளைவரை நடைபெறலாம் என்றும் அலுவலர்களின் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து தேனி மற்றும் மதுரையில் உள்ள கல்வி நிறுவனங்களில் வகுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சோதனை மேற்கொண்டதாக அலுவலர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:

ராஜீவ் கொலை வழக்கு: ஆறாவது முறையாக ஆஜராகும் முருகன்

Intro:*வேலம்மாள் குழுமத்திற்கு தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறை சோதனை*Body:*வேலம்மாள் குழுமத்திற்கு தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறை சோதனை*

சென்னை மற்றும் மதுரை திருச்சி கரூர் விருதுநகர் உள்ளிட்ட வேலம்மாள் குழுமத்திற்கு தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்ததன் அடிப்படையில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய வருமானவரி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையானது நாளை வரையில் நடைபெறலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

வேலம்மாள் குடும்பத்திற்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நிர்வாக அலுவலர்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரியில் வகுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சோதனை மேற்கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.