ETV Bharat / city

மதுரையில் மழை: கண்மாய்களில் நீர் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!

மதுரை: மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்வதால், புறநகர் பகுதியில் உள்ள கண்மாய்களில் நீர் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

மதுரையில் மழை
மதுரையில் மழை
author img

By

Published : Dec 31, 2020, 3:01 PM IST

மதுரையில் கடந்த சில நாட்களாக மழை மேகமாக காணப்பட்ட நிலையில், இன்று (டிச. 31) மாவட்டம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில், மதுரையில் இன்று (டிச. 31) காலை 10 மணி முதல் பரவலாக மழை பெய்துவருகிறது.

இதையடுத்து மதுரையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோன்று புறநகர் பகுதிகளான சிலைமான், கருப்பாயூரணி, வரிச்சியூர், ஒத்தக்கடை, அழகர்கோவில், கள்ளந்திரி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மதுரையில் மழை

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில், புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு கண்மாய்களில் நீர் நிரம்பாமல் உள்ள நிலையில், தற்போது பெய்துவரும் மழையால் ஓரளவு நீர் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க...சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் வசூல்:பிப்ரவரி 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

மதுரையில் கடந்த சில நாட்களாக மழை மேகமாக காணப்பட்ட நிலையில், இன்று (டிச. 31) மாவட்டம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில், மதுரையில் இன்று (டிச. 31) காலை 10 மணி முதல் பரவலாக மழை பெய்துவருகிறது.

இதையடுத்து மதுரையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோன்று புறநகர் பகுதிகளான சிலைமான், கருப்பாயூரணி, வரிச்சியூர், ஒத்தக்கடை, அழகர்கோவில், கள்ளந்திரி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மதுரையில் மழை

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில், புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு கண்மாய்களில் நீர் நிரம்பாமல் உள்ள நிலையில், தற்போது பெய்துவரும் மழையால் ஓரளவு நீர் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க...சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் வசூல்:பிப்ரவரி 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.