ETV Bharat / city

மன நோயாளிகளுக்கும் மருத்துவக் காப்பீடு: சுகாதாரத்துறை பதிலளிக்க உத்தரவு - மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ்

மதுரை: தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் மன நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மன நோயாளிகளுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை...!
author img

By

Published : Jun 12, 2019, 1:06 PM IST

சிவகாசியில் உள்ள மனிதவள அமைப்பைச் சேர்ந்த விஜயகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் மன நோய்களுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்கப்படவில்லை.

ஆனால் மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மன நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு, இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு அடுத்த விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

சிவகாசியில் உள்ள மனிதவள அமைப்பைச் சேர்ந்த விஜயகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் மன நோய்களுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்கப்படவில்லை.

ஆனால் மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மன நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு, இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு அடுத்த விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ்  மன நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க கோரிய வழக்கில்  தமிழக சுகாதாரத்துறை  செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.


சிவகாசியில் உள்ள  மனித வள அமைப்பை சேர்ந்த விஜயகுமார்,  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். 

 அதில்,"
தமிழகத்தில் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பல்வேறு நோய்களுக்கும் சிறப்பு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.  இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். 

 ஆனால் மன நோய்களுக்கு,  முதலமைச்சரின்  விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்கப்பட வில்லை.  ஆனால் மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது.


எனவே,  தமிழகத்தில் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் மன நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன்,  புகழேந்தி அமர்வு, இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.