அந்தக் கடிதத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறியிருப்பதாவது:
ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும்.
ஆகவே ரமலான் திருநாள் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதைக் கணக்கிற் கொள்ளாமல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை மே 13, 15ஆம் தேதிகளில் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானைக்கு கரோனா இல்லை!