ETV Bharat / city

ஐந்து கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டவேண்டும்:அன்புமணி ராமதாஸ்

மதுரை: காவிரி ஆற்றில் ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டி கடலில் வீணாக கலக்கும் நீரின் அளவைக் குறைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

anbumani press meet
author img

By

Published : Aug 13, 2019, 10:14 PM IST

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தற்போது இயற்கை பேரிடர் காரணமாக கேரளாவில் 80 பேர்,கர்நாடகாவில் 40பேர் தமிழ்நாட்டில் சிலர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் விளைவாக இத்தகைய உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

காலநிலை மாற்றத்தைப் புரிந்து கொண்டு உலகநாடுகள் திட்டங்களை வகுத்து செயல்பட்டுவருகின்றன. அதே போல மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்து உயிரிழப்புகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர்தான் நமக்கு திறந்துவிடப்படுகிறது.

அன்புமணி பேட்டி

அதுவும் குறிப்பிட்ட சிலநாட்களிலேயேஎ அதிகப்படியான நீரை திறந்துவிடுவதால் அவற்றை தேக்க முடியாமல் அந்நீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆகையால் காவிரி ஆற்றில் ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும் தடுப்பணைகள் கட்டவேண்டும்.

மேலும் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஐந்து மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு அறிவித்தால் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை அங்கு செயல்படுத்த முடியாது" என்றார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தற்போது இயற்கை பேரிடர் காரணமாக கேரளாவில் 80 பேர்,கர்நாடகாவில் 40பேர் தமிழ்நாட்டில் சிலர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் விளைவாக இத்தகைய உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

காலநிலை மாற்றத்தைப் புரிந்து கொண்டு உலகநாடுகள் திட்டங்களை வகுத்து செயல்பட்டுவருகின்றன. அதே போல மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்து உயிரிழப்புகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர்தான் நமக்கு திறந்துவிடப்படுகிறது.

அன்புமணி பேட்டி

அதுவும் குறிப்பிட்ட சிலநாட்களிலேயேஎ அதிகப்படியான நீரை திறந்துவிடுவதால் அவற்றை தேக்க முடியாமல் அந்நீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆகையால் காவிரி ஆற்றில் ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும் தடுப்பணைகள் கட்டவேண்டும்.

மேலும் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஐந்து மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு அறிவித்தால் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை அங்கு செயல்படுத்த முடியாது" என்றார்.

Intro:காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் - அன்புமணி ராமதாஸ்

காவிரி டெல்டா பகுதியில் 5 மாவட்டங்கள் உள்ளன. அவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் அவ்வாறு அறிவித்தால் தான் ongc ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்கள் அங்கு வராது இதற்கு சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்
Body:காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் - அன்புமணி ராமதாஸ்

காவிரி டெல்டா பகுதியில் 5 மாவட்டங்கள் உள்ளன. அவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் அவ்வாறு அறிவித்தால் தான் ongc ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்கள் அங்கு வராது இதற்கு சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்

மதுரை விமான நிலையத்தில் பாமக இளைஞரணித் தலைவரும் ராஜசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, தற்போது கேரளாவில் இயற்கை பேரிடர் காரணமாக 80 பேர் இறந்துள்ளனர்அதேபோன்று கர்நாடகாவிலும் 40 பேர் இறந்துள்ளனர் இதற்கு காரணம் காலநிலை மாற்றம். இதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைக்கு நாம் தயாராக வேண்டும் என்பதை நாங்கள் முன்பிருந்தே வலியுறுத்தி வருகிறோம்

தற்போது காலநிலை மாற்றத்தில் இருந்து காலநிலை அவசரத்திற்கு சென்று இருக்கிறோம் இதனை உலக நாடுகள் புரிந்து கொண்டு அதற்குரிய செயல் திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன

ஒரு பக்கம் வெள்ளம் ஒரு பக்கம் வறட்சி என மாறி மாறி பருவ சூழல் ஏற்படும் அதனைப் புரிந்துகொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

தமிழ்நாட்டைச் சுற்றி பல்வேறு மாநிலங்களில் வெள்ளக் காடாக இருக்கும் நிலையில் தமிழகம்குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி தவித்து வருகிறது இனிவரும் காலங்களில் இந்த காலநிலை அவசரம் காரணமாக இது போன்ற நிலையைத் தான் நாம் எதிர்கொள்ளப் போகிறோம்

ஆகையால் வருகின்ற சுதந்திர தினம் அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம சபை கூட்டத்தில் காலநிலை அவசரத்தை பற்றி ஒரு தீர்மானம் போட்டு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஒவ்வொரு கிராம சபைகளும் விவாதம் செய்து ஊராட்சிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

காவிரியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கின்ற வழக்கம் கடந்த 8 ஆண்டுகள் முன்புவரை இருந்தது. இப்போது மேட்டூர் அணையை ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி திறக்கின்ற சூழ்நிலை உள்ளது. 8 ஆண்டு காலமாக குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை சம்பா மூன்றாண்டு காலமாக சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ஆண்டும் சம்பா பருவத்திற்கு எதுவாக உள்ளது ஆனால் என்னுடைய கேள்வி காவிரி மேலாண்மை ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதுதான்.

கர்நாடக அணைகளில் நிரம்பி பிறகு உபரி நீரை தான் தமிழ்நாட்டிற்கு கொடுக்கின்றனர். அதாவது கர்நாடகத்தில் மழை பெய்ய இருக்கிறது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் கர்நாடக அணைகள் நிரம்பும் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது ஒரே நாளில் இரண்டரை லட்சம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீரின் மூலம் இரண்டு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பி விடும் என்ற சூழல் உள்ளது.

இதனால் அதன் பிறகு வருகின்ற தண்ணீர் எல்லாம் கடலில் கலக்கின்ற சூழல் இருக்கும் கடந்த ஆண்டு 130 முதல் 140 டிஎம்சி நீர் கடலில் கலந்திருக்கிறது.
கர்நாடகம் நமக்கு தர வேண்டிய 172 டிஎம்சி ஒரு வார காலத்திற்குள் கொடுத்து விடுவார்கள் ஆனால் நமக்கு தேக்கி வைக்கின்ற சூழ்நிலை இல்லை தடுப்பணைகள் இல்லை அதை ஏற்படுத்த வேண்டும் அதற்கு ஏற்ப காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா தமிழ்நாட்டில் உள்ள காவிரி படுகைகளில் உள்ள அனைத்து அணைகளும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்து அதற்கு மழை காலம் முன்பே கர்நாடகவில் இருந்து நீரை வெளியிட்டு விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை தான் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் இன்னும் அணைகள் கட்டுங்கள் தடுப்பணைகள் கட்ட வேண்டும். காவிரியில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டரிலும் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

வைகை ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்று நான் கடந்த ஆண்டு இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன் தாமிரபரணி 2 நாள் பாலாறு பாதுகாப்போம் என 2 நாள் காவிரியை பாதுகாப்போம் என 3 நாள்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன் என்றார்

மேலும் ரஜினி பற்றிய கேள்வி ஒன்றுக்கு தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் யார் வேண்டுமானாலும் தங்களது கருத்தை சொல்லலாம் அதற்கு முழு உரிமை உண்டு
வைகோ காங்கிரசை எதிர்த்துப் பேசியது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு
உண்மையைதான் கூறியிருக்கிறார்.
இந்த கேள்வியை வைகோவிடம்தான் கேட்க வேண்டும் அது அவருடைய கருத்து என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.