ETV Bharat / city

முழுக்கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - கரையோரப் பகுதியினருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் மட்டம் உயர்ந்ததால், அப்பகுதியினருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ளம்
author img

By

Published : Oct 12, 2019, 10:34 PM IST

Updated : Oct 12, 2019, 11:27 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் வனப்பகுதியில் பெய்த கனமழையால், குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து முழுக் கொள்ளளவான 42 அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து சுமார் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வினோபா நகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், பள்ளத்தூர், கள்ளியங்காடு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மீன் பிடிக்கவோ, மற்ற தேவைகளுக்கோ ஓடையில் பொதுமக்கள் இறங்கவேண்டாம் எனவும் அப்பகுதிகளில் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுவருகிறது.

குண்டேரிப்பள்ளத்தில் குவிந்த வெள்ளம்

மேலும் அணை நிரம்பி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒருபக்கம் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், மறுபக்கம் அணையின் உபரி நீர் தடுப்பணை இல்லாததால் வீணாக பவானி ஆற்றில் கலக்கிறது. முன்னதாக இந்த ஓடையில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படாததால் தற்போது அணையின் உபரி நீர் வீணாக பவானி ஆற்றில் கலக்கிறது என்று அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க:

இனி அடுத்த தசராவில் சந்திப்போம்! விடைபெற்ற அம்மன்கள்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் வனப்பகுதியில் பெய்த கனமழையால், குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து முழுக் கொள்ளளவான 42 அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து சுமார் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வினோபா நகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், பள்ளத்தூர், கள்ளியங்காடு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மீன் பிடிக்கவோ, மற்ற தேவைகளுக்கோ ஓடையில் பொதுமக்கள் இறங்கவேண்டாம் எனவும் அப்பகுதிகளில் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுவருகிறது.

குண்டேரிப்பள்ளத்தில் குவிந்த வெள்ளம்

மேலும் அணை நிரம்பி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒருபக்கம் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், மறுபக்கம் அணையின் உபரி நீர் தடுப்பணை இல்லாததால் வீணாக பவானி ஆற்றில் கலக்கிறது. முன்னதாக இந்த ஓடையில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படாததால் தற்போது அணையின் உபரி நீர் வீணாக பவானி ஆற்றில் கலக்கிறது என்று அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க:

இனி அடுத்த தசராவில் சந்திப்போம்! விடைபெற்ற அம்மன்கள்!

Intro:Body:கோபி அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் நிரம்பியது

tn_erd_03_sathy_gunderipallam_dam_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையினால் 13 அடி உயர்ந்து முழு கொள்ளவான 42 அடியை எட்டியது. அணையிலிருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி உபரிநீர் குண்டேரிப்பள்ளம் அணையின் உபரி நீர் ஓடையில் வெளியேற்றப்படுகிறது. வினோபாநகர் கொங்கர்பாளையம் வாணிப்புத்தூர் பள்ளத்தூர் கள்ளியங்காடு உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான விளாங்கோம்பை கம்மனூர் மல்லியம்மன்துர்க்கம் கடம்பூர் குன்றி உள்ளிட்ட வனப்பகுதியில் இரவு பெய்த கன மழையினால் விளாங்கோம்பை கம்பனூர் உள்ளிட்ட காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. அதனால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து காலையில் அணையின் நீர் மட்;டம் முழு கொள்ளவான 42 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரில் 6 ஆயிரம் கன அடி அணையிலிருந்து வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வினோபாநகர் கொங்கர்பாளையம் வாணிப்புத்தூர் பள்ளத்தூர் கள்ளியங்காடு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வருவாய்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் மேடான பகுதிக்கு செல்லுமாறும் கால் நடைகளையும் ஓடையில் இறங்காமல் பாதுகாக்கவும் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுவருகிறது. மேலும் மீன் பிடிக்கவோ மற்ற தேவைகளுக்காகவே ஓடையில் பொதுமக்கள் இறங்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுவருகிறது. குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருவதால் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்சியடைந்துள்ளனர். கடந்த காலங்களில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து 20 அடிக்கும் கீழ் சென்றது. பருவ மழையின் போது இப்பகுதியில் போதிய மழை இல்லாது போனதால் விவசாயிகள் கவலையடைந்திருந்தனர். தற்போது அணை நிரம்பியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் இன்னும் அணை தூர்வாரப்பட்டிருந்தால் அதிகளவு நீர் நிரம்பிருக்கமுடியும் எனவும் தற்போது அணையில் 10 அடிக்கு மேல் சகதி உள்ளதால் அத்தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குண்டேரிப்பள்ளம் அணையின் உபரி நீர் ஓடையில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான முயற்சி மேற்கௌ;ளப்படாததினால் தற்போது அணையின் உபரி நீர் வீணாக பவானி ஆற்றில் கலக்கிறது என இப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்…

Conclusion:
Last Updated : Oct 12, 2019, 11:27 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.