ETV Bharat / city

ஆசிரியை தாக்கி 24 மாணவர்கள் படுகாயம்: பெற்றோர் அச்சம் - teacher attack Students

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் படுகாயமடைந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மாணவர்கள் படுகாயம்
author img

By

Published : Oct 19, 2019, 11:32 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்றுவருகின்றனர். 10ஆம் வகுப்பில் மட்டும் ஏ, பி, சி என மூன்று வகுப்புகளாக பிரித்து ஒவ்வொரு வகுப்பிலும் 30 மாணவர்கள் உள்ளனர். 10ஆம் பி பிரிவில் பயிலும் மாணவ மாணவியருக்கு கணித ஆசிரியையாக சிவகாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த ஆசிரியை நேற்று கணித பாடத்துக்கான வகுப்பு தேர்வு நடத்தியுள்ளார். அதில் 28 மாணவ மாணவியர் குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறி, அவர்களை பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அதில் கை, கால்களில் வீக்கத்துடன் மாணவ மாணவியர் வகுப்பில் அழுதுகொண்டிருந்தனர். அடுத்த வகுப்புக்கு வந்த மற்றொரு ஆசிரியை, மாணவ மாணவியரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், தலைமையாசிரியர், முதல்வரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் படுகாயம்

அதைத் தொடர்ந்து முதல்வரின் அறிவுறுத்தலின்படி, பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரை கூகலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆசிரியர்கள் அழைத்துச்சென்றனர். தகலறிந்து மருத்துமனைக்கு வந்த பெற்றோர், பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

மாணவர்கள் படுகாயம்

மேலும் கணித ஆசிரியை சிவகாமி, மாணவ மாணவிகளிடம் எப்போதும் விரோதப்போக்கை கடைப்பிடிப்பதாகவும் இது குறித்து நிர்வாகத்துக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் அளித்திருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்றுவருகின்றனர். 10ஆம் வகுப்பில் மட்டும் ஏ, பி, சி என மூன்று வகுப்புகளாக பிரித்து ஒவ்வொரு வகுப்பிலும் 30 மாணவர்கள் உள்ளனர். 10ஆம் பி பிரிவில் பயிலும் மாணவ மாணவியருக்கு கணித ஆசிரியையாக சிவகாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த ஆசிரியை நேற்று கணித பாடத்துக்கான வகுப்பு தேர்வு நடத்தியுள்ளார். அதில் 28 மாணவ மாணவியர் குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறி, அவர்களை பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அதில் கை, கால்களில் வீக்கத்துடன் மாணவ மாணவியர் வகுப்பில் அழுதுகொண்டிருந்தனர். அடுத்த வகுப்புக்கு வந்த மற்றொரு ஆசிரியை, மாணவ மாணவியரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், தலைமையாசிரியர், முதல்வரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் படுகாயம்

அதைத் தொடர்ந்து முதல்வரின் அறிவுறுத்தலின்படி, பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரை கூகலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆசிரியர்கள் அழைத்துச்சென்றனர். தகலறிந்து மருத்துமனைக்கு வந்த பெற்றோர், பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

மாணவர்கள் படுகாயம்

மேலும் கணித ஆசிரியை சிவகாமி, மாணவ மாணவிகளிடம் எப்போதும் விரோதப்போக்கை கடைப்பிடிப்பதாகவும் இது குறித்து நிர்வாகத்துக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் அளித்திருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:Body:பத்தாம் வகுப்பு கணித ஆசிரியை சிவகாமி தாக்கியதில் 24 மாணவ மாணவிகள் படுகாயம்

tn_erd_04_sathy_teacher_attack_vis_tn10009,
tn_erd_04a_sathy_teacher_attack_byte_tn10009,

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியை சிவகாமி தாக்கியதில் 24 மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்தனர். கூகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும் மாணவ மாணவிகள் கணித ஆசிரியை மாற்றம் செய்யவேண்டும் என்றும் கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கைவைத்துள்ளனர்…
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரியில் செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் காந்தி கல்விநிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் பத்தாம் வகுப்பை ஏ,பி.சி என மூன்று வகுப்புகளாக பிரிந்து ஒவ்வொரு வகுப்பிலும் 30 மாணவர்களை கொண்டு பயிற்றுவித்து வருகின்றனர். இந்நிலையில் பி பிரிவில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கணித ஆசிரியையாக சிவகாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த ஆசிரியை நேற்று கணித பாடத்திற்கான வகுப்பு தேர்வை நடத்தியுள்ளார். அதில் 28 மாணவ மாணவிகள் குறைந்த மதிபெண்கள் பெற்றதாகக்கூறி இன்று பள்ளி கணித வகுப்பில் 24 மாணவ மாணவிகளை பிரம்பு கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அதில் கை மற்றும் கால்களில் அடிப்பட்ட தழும்புடனும் வீக்கத்துடனும் வகுப்பில் அழுதுகொண்டிருந்துள்ளனர். அடுத்த வகுப்பிற்கு சென்ற ஆசிரியை மாணவ மாணவிகளை பார்த்து அதிர்ச்சியடைந்து தலைமையாசிரியம் மற்றும் முதல்வரிடம் தகவல் தெரிவித்துள்ளார். முதல்வர் மற்றும் தலைமையாசிரியரின் அறிவுரைப்படி பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை கூகலூரில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு மருத்துவர்கள் மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர். தகலறிந்து மருத்துமனைக்கு வந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்து அதிர்ச்சியடைந்து குழந்தைகள் படிக்க வில்லையெனில் பெற்றோர்களிடம் தெரிவிக்கவேண்டும் அல்லது முதல்வர் மற்றும் தலைமையாசிரிடம் தெரிவிக்கவேண்டும் அவர்களாகவே பிரம்பால் தண்டித்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் அந்த ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இல்லாவிடில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிவகாமி என்ற கணித ஆசிரியை மாணவ மாணவிகளிடம் எப்பொழுதும் விரோத போக்கை கடைப்பிடிப்பதாகவும் இதுபோல் பல முறை மாணவ மாணவிகளை தாக்கியிருப்பதாகவும் இது குறித்து நிர்வாகத்திற்கும் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் அளித்திருப்பதாகவும் ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மாணவ மாணவிகளை தாக்கிய ஆசிரியை சிவகாமி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அனைவரும் கோரிக்கைவைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை சிவகாமியை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது தொடர்பு கிடைக்கவில்லை…
பேட்டி:
1.ஆர்த்தி – பாதிக்கப்பட்ட மாணவி
2.திரௌபதி – பாதிக்கப்பட்ட மாணவி
3.கலையரசன் - பாதிக்கப்பட்ட மாணவர்
4.திரு.ஈஸ்வரன் - பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை
5.திரு.குணசேகரன் - பாதிக்கப்பட்ட மாணவியின்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.