ETV Bharat / city

காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Apr 16, 2021, 3:46 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தார்.

காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு
காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப்பில் கூமாட்டி செட்டில்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் வனத்தாய்.

இவர் நேற்று (ஏப். 15) மாலை கூமாட்டி செட்டில்மெண்ட் பகுதி அருகே உள்ள வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்கச் சென்றுள்ளார்.

பெண்ணை தாக்கிய காட்டு யானை

அப்போது, அங்கு வந்த காட்டு யானை வனத்தாயை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அறிந்த மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் நவீன் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'காட்டு யானை தாக்கி இரண்டு மாடுகள் படுகாயம்!'

பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப்பில் கூமாட்டி செட்டில்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் வனத்தாய்.

இவர் நேற்று (ஏப். 15) மாலை கூமாட்டி செட்டில்மெண்ட் பகுதி அருகே உள்ள வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்கச் சென்றுள்ளார்.

பெண்ணை தாக்கிய காட்டு யானை

அப்போது, அங்கு வந்த காட்டு யானை வனத்தாயை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அறிந்த மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் நவீன் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'காட்டு யானை தாக்கி இரண்டு மாடுகள் படுகாயம்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.