ETV Bharat / city

போலீசை பணி செய்யவிடாமல் தடுத்த இருவர் கைது!

சென்னை: அம்பத்தூரில் காவல் துறை அலுவலர் ஒருவரை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்திய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசை பணி செய்யவிடாமல் தடுத்துநிறுத்திய 2 பேர் கைது
author img

By

Published : May 5, 2019, 11:33 PM IST

அம்பத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சுந்தர். இவர், நேற்று இரவு அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவருடன் ஊர்காவல் படையை சேர்ந்த சரவணனும் உடனிருந்தார்.

அப்போது, அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை அருகே, ஒரகடம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதன் அருகில் சென்று கண்ணாடியை திறக்குமாறு காரில் இருந்தவர்களிடம் சுந்தர் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரித்துவித்துள்ளனர்.

போலீசை பணி செய்யவிடாமல் தடுத்துநிறுத்திய 2 பேர் கைது

இதையடுத்து, காரிலிருந்து இரண்டு பேர் வெளியே வந்துள்ளனர். இதனிடையே, காரை சோதனையிட முயன்ற தலைமை காவலர் சுந்தரை பணிசெய்யவிடாமல் தடுத்துநிறுத்திய அவர்கள் அவதூறாகவும் பேசி, தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர் வைத்திருந்த வாக்கி டாக்கியை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்ததோடு, சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சுந்தர் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆய்வாளர் போர்க்கொடி தலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஏட்டு சுந்தரிடம் தகராற்றில் ஈடுபட்டது, ஒரகடம் காந்தி நகரைச் சேர்ந்த உத்திநாதன் (45), அம்பத்தூர் பானு நகர் கருணாநிதி தெருவை சேர்ந்த வேலாயுதம் (47) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த இருவரையும், இன்று மாலை, கைது செய்த காவல் துறையினர், அவர்கள் வைத்திருந்த காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிபதி வீட்டில் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

அம்பத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சுந்தர். இவர், நேற்று இரவு அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவருடன் ஊர்காவல் படையை சேர்ந்த சரவணனும் உடனிருந்தார்.

அப்போது, அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை அருகே, ஒரகடம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதன் அருகில் சென்று கண்ணாடியை திறக்குமாறு காரில் இருந்தவர்களிடம் சுந்தர் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரித்துவித்துள்ளனர்.

போலீசை பணி செய்யவிடாமல் தடுத்துநிறுத்திய 2 பேர் கைது

இதையடுத்து, காரிலிருந்து இரண்டு பேர் வெளியே வந்துள்ளனர். இதனிடையே, காரை சோதனையிட முயன்ற தலைமை காவலர் சுந்தரை பணிசெய்யவிடாமல் தடுத்துநிறுத்திய அவர்கள் அவதூறாகவும் பேசி, தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர் வைத்திருந்த வாக்கி டாக்கியை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்ததோடு, சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சுந்தர் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆய்வாளர் போர்க்கொடி தலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஏட்டு சுந்தரிடம் தகராற்றில் ஈடுபட்டது, ஒரகடம் காந்தி நகரைச் சேர்ந்த உத்திநாதன் (45), அம்பத்தூர் பானு நகர் கருணாநிதி தெருவை சேர்ந்த வேலாயுதம் (47) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த இருவரையும், இன்று மாலை, கைது செய்த காவல் துறையினர், அவர்கள் வைத்திருந்த காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிபதி வீட்டில் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

05.05.19
திருவள்ளூர்
ஆவடி_ஆ.கார்த்திக்

அம்பத்தூரில் போலீஸ் ஏட்டை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்கி டாக்கி பிடுங்கி சாலையில் போட்டு உடைத்த இருவரை  போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர் போலீஸ்  போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சந்தர். இந்நிலையில்,நேற்று இரவு சந்தர் அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவருடன் ஊர்க்காவல் படையை சார்ந்த சரவணனும் உடன் இருந்தார்.அப்போது அம்பத்தூர் -செங்குன்றம் நெடுஞ்சாலை, ஒரகடம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அதனருகில் சென்று ஏட்டு சந்தர் கண்ணாடியை திறக்குமாறு கூறியுள்ளார்.அப்போது உள்ளே இருந்த இருவர் கார் கண்ணாடியை நீண்ட நேரமாக திறக்க மறுத்து  உள்ளனர். 


பின்னர், அவர்கள் இருவரும் கார் கண்ணாடியை திறந்து வெளியே வந்து உள்ளனர். அதன் பிறகு, ஏட்டு சந்தர் அந்த காரை சோதனை செய்ய முயன்றுள்ளார். அப்போது,அவர்கள் இருவரும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி, தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர் வைத்திருந்த வாக்கிடாக்கியை இருவரும் பிடுங்கி சாலையில் போட்டு உடைத்து உள்ளனர், பிறகு, அவர்கள் இருவரும் சேர்ந்து ஏட்டு சந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர். 

இது குறித்து ஏட்டு சந்தர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் போர்கொடி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏட்டு சந்தரிடம் தகராறில் ஈடுபட்டது, அம்பத்தூர், ஒரகடம்,காந்தி நகரைச் சார்ந்த உத்திநாதன் (45), அம்பத்தூர், பானு நகர் கருணாநிதி தெருவை சேர்ந்த வேலாயுதம் (47) என்பது தெரியவந்தது. பின்னர்,  போலீசார் தலைமறைவாக இருந்த இருவரையும் மாலை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் அவர்களை அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.