ETV Bharat / city

அதிமுக கூட்டணியைப் பார்த்து அஞ்சும் ஸ்டாலின்...! சரத்குமார் பேச்சு

author img

By

Published : Apr 4, 2019, 12:06 PM IST

கோவை: அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியைப் பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் அச்சப்படுகிறார் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

sarath kumar

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மகேந்திரனுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று நெகமம், ஆனைமலை, ஜமீன் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, 'மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்க அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்தது முதல் வெற்றி. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்தது ஸ்டாலினுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அதிமுக கூட்டணி பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என்று ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்று விமர்சித்துள்ளார்.

அதிமுக கூட்டணியைப் பார்த்து ஸ்டாலின் அச்சம்- சரத்குமார் விமர்சனம்!

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மகேந்திரனுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று நெகமம், ஆனைமலை, ஜமீன் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, 'மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்க அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்தது முதல் வெற்றி. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்தது ஸ்டாலினுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அதிமுக கூட்டணி பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என்று ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்று விமர்சித்துள்ளார்.

அதிமுக கூட்டணியைப் பார்த்து ஸ்டாலின் அச்சம்- சரத்குமார் விமர்சனம்!
வருங்கால இளைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் உயர அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேச்சு 
பொள்ளாச்சி -ஏப்ரல் 4 
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மகேந்திரனுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று நெகமம், ஆனைமலை, ஜமீன் ஊத்துக்குளி ஆகிய கிராமங்களில் வேன் மூலம் சென்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்,அப்போது சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசும் போது, மத்தியில் வலுவான நிலையான ஆட்சியை அமைக்க அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்தது முதல் வெற்றி என்றும்,அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்தது ஸ்டாலினை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் அதிமுக கூட்டணி பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என்று பேசுகிறார் என்றும், கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி,கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், காற்றில் கூட காசு பார்க்கும் முடியும் என 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் ஊழல் செய்தது திமுக தான் என்றும், காவிரி நதிநீர் பிரச்சனைக்கு இழுபறியை ஏற்படுத்தியது காங்கிரஸ் மற்றும் திமுக தான் என்றும், கச்சத்தீவு தாரை வார்த்து தமிழக மீனவர்களை பாதிப்புக்குள்ளாக்கியது திமுக என்றும், எந்த ஒரு நல்ல திட்டத்தையும் தமிழகத்துக்கு  வரக்கூடாது நினைத்தது  வருவது திமுக கூட்டணி என்றும், வருங்கால இளைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் உயர வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் சரத்குமார் பேசினார். 

பிரச்சார பேச்சு - சரத்குமார்,சமத்துவ மக்கள் கட்சி தலைவர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.