ETV Bharat / city

சாலை வசதி செய்து கொடுக்காததால் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு!

author img

By

Published : Dec 25, 2019, 11:12 AM IST

கோவை: அரசு பலமுறை வாக்குறுதி அளித்தும் தார்சாலை வசதி அமைத்துத் தராததைக் கண்டித்து மலை கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

சாலை வசதி இல்லாத கிராமங்கள் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு
சாலை வசதி செய்து கொடுக்காததால் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே அரக்கடவு, மூணு குட்டை என இரண்டு மலை கிராமங்கள் உள்ளன. வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர்.

வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கிராமங்களில் சாலை குண்டும் குழியுமாக இருக்கும், இதனால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சென்று வருவதில் மக்களுக்கு கடும் சிரமம் இருந்துள்ளது.

சாலை வசதி இல்லாத கிராமங்கள்: உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிக்க முடிவு!

மேலும், சாலை வசதி இல்லாததால் நியாய விலைக் கடையில் இருந்து அரிசியை வெகு தூரம் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளிட்ட பல சிக்கல்கள் இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக அரசு பலமுறை வாக்குறுதி அளித்தும் தார்சாலை வசதி அமைத்துத் தராததைக் கண்டித்து, ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க இரண்டு மலை கிராம மக்கள் முடிவு செய்து அதனை மனுவாக எழுதி அம்மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே அரக்கடவு, மூணு குட்டை என இரண்டு மலை கிராமங்கள் உள்ளன. வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர்.

வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கிராமங்களில் சாலை குண்டும் குழியுமாக இருக்கும், இதனால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சென்று வருவதில் மக்களுக்கு கடும் சிரமம் இருந்துள்ளது.

சாலை வசதி இல்லாத கிராமங்கள்: உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிக்க முடிவு!

மேலும், சாலை வசதி இல்லாததால் நியாய விலைக் கடையில் இருந்து அரிசியை வெகு தூரம் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளிட்ட பல சிக்கல்கள் இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக அரசு பலமுறை வாக்குறுதி அளித்தும் தார்சாலை வசதி அமைத்துத் தராததைக் கண்டித்து, ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க இரண்டு மலை கிராம மக்கள் முடிவு செய்து அதனை மனுவாக எழுதி அம்மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!

Intro:கோவை மாவட்டத்தில் பல முறை வாக்குறுதி அளித்து தார்சாலை வசதி அமைத்துத் தராததை கண்டித்து இரண்டு மலைகிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்


Body:கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே அரக்கடவு மூணு குட்டை ஆகிய இரண்டு மலை கிராமங்கள் உள்ளன வனப்பகுதிக்குள் அமைந்துள்ள கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் போதிய சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பலமுறை வாக்குறுதி அளித்தும் தார்சாலை வசதி அமைத்துத் தராததை கண்டித்து ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க இரண்டு மலை கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனர் ஐந்து கிலோமீட்டர் வனப் பகுதிக்குள் அமைந்துள்ள கிராமங்களில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதாகவும் இதனால் கல்வி மருத்துவம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சென்று வருவதில் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர் மேலும் சாலை வசதி இல்லாததால் நடமாடும் பொது விநியோகத் திட்டம் மூலம் ரேஷன் அரிசி கிடைப்பதில்லை எனவும் ரேஷன் அரிசியில் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர் பல முறை தேர்தல் வாக்குறுதி அளித்தும் சாலை வசதி அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.