ETV Bharat / city

ஈச்சனாரியில் 2 டன் கலப்பட தேயிலை தூள் பறிமுதல்!

author img

By

Published : Dec 21, 2019, 7:10 PM IST

கோவை: ஈச்சனாரி பகுதியில் ரூ.4.25 லட்சம் மதிப்புடைய இரண்டு டன் கலப்பட தேயிலை தூள் உணவுப் பாதுகாப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

kovai-at eachanari2-ton-duplicate-tea-powder-has-been-seized-by-food-safety-officers
ஈச்சனாரியில் 2 டன் போலி டீத்தூள் பறிமுதல்!

கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகில் உள்ள ஒரு குடோனில் கலப்பட தேயிலைத் தூள் தயாரிக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் வந்தது.

அதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற உணவுப் பாதுகாப்புத் துறையினர் அந்த குடோனிலிருந்து ரூ.4.25 லட்சம் மதிப்புடைய சுமார் இரண்டு டன் எடையுள்ள கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்தனர். அப்போது அதில் ஈடுபட்ட ஹசுல் ஹமீத் என்பவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அலுவலர்கள் அவரைப் பிடித்து விசாரித்தபோது, தான் இங்கு சப்ளையராக வேலை செய்வதாகவும் இதன் உரிமையாளர் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த செரிப் என்றும் கூறினார்.

இதனையடுத்து காவல் துறையினர் ஹசுல் ஹமீதை கைது செய்து, அங்கேயிருந்த இரண்டு டன் கலப்பட தேயிலை தூள், அதை பாக்கெட் செய்யும் ரூ.1.5 லட்சம் மதிப்புடைய இயந்திரத்தையும் பறிமுதல்செய்தனர். மேலும் உரிமையாளர் செரிப்பை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ஈச்சனாரியில் 2 டன் போலி தேயிலை தூள் பறிமுதல்!

இதையும் படியுங்க: குன்னூரில் ஸ்பெஷாலிட்டி தேயிலைத் தூள் கண்காட்சி!

கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகில் உள்ள ஒரு குடோனில் கலப்பட தேயிலைத் தூள் தயாரிக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் வந்தது.

அதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற உணவுப் பாதுகாப்புத் துறையினர் அந்த குடோனிலிருந்து ரூ.4.25 லட்சம் மதிப்புடைய சுமார் இரண்டு டன் எடையுள்ள கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்தனர். அப்போது அதில் ஈடுபட்ட ஹசுல் ஹமீத் என்பவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அலுவலர்கள் அவரைப் பிடித்து விசாரித்தபோது, தான் இங்கு சப்ளையராக வேலை செய்வதாகவும் இதன் உரிமையாளர் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த செரிப் என்றும் கூறினார்.

இதனையடுத்து காவல் துறையினர் ஹசுல் ஹமீதை கைது செய்து, அங்கேயிருந்த இரண்டு டன் கலப்பட தேயிலை தூள், அதை பாக்கெட் செய்யும் ரூ.1.5 லட்சம் மதிப்புடைய இயந்திரத்தையும் பறிமுதல்செய்தனர். மேலும் உரிமையாளர் செரிப்பை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ஈச்சனாரியில் 2 டன் போலி தேயிலை தூள் பறிமுதல்!

இதையும் படியுங்க: குன்னூரில் ஸ்பெஷாலிட்டி தேயிலைத் தூள் கண்காட்சி!

Intro:கோவை ஈச்சனாரி பகுதியில் 2 டன் போலி டீத்தூள் பறிமுதல்.Body:கோவை ஈச்சனாரி பகுதியில் 2 டன் போலி டீ தூள் பறிமுதல்.

கோவை பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி பகுதி ரத்தினம் கல்லூரியின் அருகில் 4.25 லட்சம் மதிப்புள்ள 2 டன் போலி டீ தூள் உணவு பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகில் உள்ள ஒரு குடோனில் போலி டீத்தூள் தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதிக்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறையினர் அந்த குடோனில் இருந்து 4.25 லட்சம் மதிப்புள்ள சுமார் 2 டன் எடையுள்ள போலி டீத்தூளை பறிமுதல் செய்தனர். அப்போது அங்கு ஹசுல் ஹமீத் என்பவர் உணவு பாதுகாப்பு துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை பிடித்து செய்து விசாரித்தபோது தான் இங்கு சப்ளையர் ஆக வேலை செய்வதாகவும் இதன் முதலாளி குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த செரிப் என்றும் கூறினார்.

இதனை அடுத்து காவல்துறையினர் ஹசுல் ஹமீதை கைது செய்து அங்கே இருந்த 2 டன் போலி டீத்தூள் மற்றும் அதை பாக்கெட் செய்யும் 1.5 லட்சம் மதிப்புள்ள இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் முதலாளி செரிப்பை போலீஸார் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.