ETV Bharat / city

விமானத்தில் 883 கிராம் தங்கத்தை கடத்திவந்த இருவர் கைது

கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த ஏர் அரேபியா விமானத்தில் பேஸ்ட் வடிவிலான 883 கிராம் தங்கத்தை கடத்திவந்த இருவரை சுங்கத் துறை அலுவலர்கள் கைதுசெய்தனர்.

author img

By

Published : Aug 10, 2021, 6:21 AM IST

883 கிராம் தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது
883 கிராம் தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது

கோயம்புத்தூர்: சார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 9) ஏர் அரேபியா விமானம் வந்தது. அதிலிருந்து வந்த பயணிகளை அங்கிருந்த சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, ராமசாமி சேகர், தர்ம அருள்நேதாஜி ஆகிய இருவரையும் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தபோது, இருவரும் ஆடைக்குள் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரிடமுமிருந்த 42 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 883 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

பின்னர், தங்கத்தை கடத்திவந்த இருவரிடமும் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: போலி தங்க சங்கிலியை விற்க வந்தவர் கைது!

கோயம்புத்தூர்: சார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 9) ஏர் அரேபியா விமானம் வந்தது. அதிலிருந்து வந்த பயணிகளை அங்கிருந்த சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, ராமசாமி சேகர், தர்ம அருள்நேதாஜி ஆகிய இருவரையும் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தபோது, இருவரும் ஆடைக்குள் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரிடமுமிருந்த 42 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 883 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

பின்னர், தங்கத்தை கடத்திவந்த இருவரிடமும் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: போலி தங்க சங்கிலியை விற்க வந்தவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.