கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று வளாக தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள்,பேராசியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு 12 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனியார் சூரிய மின் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் நிறுவனத்தின் நிறுவனர் ரத்தினவேலு சூரிய மின் சக்தி குறித்து பேசுகையில், சூரிய மின் உற்பத்தி வரும் காலங்களில் மின்சாரத்தை சேமிக்கும். விவசாயிகள் பயன்படுத்தும் மின் மோட்டார்கள் சூரிய மின்சக்தி மூலம் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
![மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரி சூரிய மின் உற்பத்தி நிறுவனம் சூரிய மின்சக்தி மின் மோட்டார் பொள்ளாச்சி Dr. Mahalingam College of Engineering and Technology Solar power electric motor Solar Power Company](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4352334_.jpg)
தற்போது சூரிய மின்சக்தி வீட்டு தேவைக்கும் விவசாயத்திற்கும் மட்டுமின்றி தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக எங்களது நிறுவனதில் 16 லட்சம் யூனிட் மின்சாரம் சூரிய மின் சக்தி வழியாக தயாரித்து உபயோகப்படுத்துகிறோம். தொழிற்சாலைகளில் சூரிய மின் சக்தியை பயன்படுத்துவதால் பெருமளவு மின் கட்டணம் சேமிப்பாகும்.
இதுபோல் மின் சேமிப்பு மூலம் மிச்சப்படுத்தப்படும் தொகையை தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்க முடியும். மேலும் சுற்று சூழல் மாசுவடுவதைத் தடுத்து தூய்மையான பாரதத்தை உருவாக்க முடியும் என கூறினார்.