ETV Bharat / city

‘ஊழல்மணி - பொய்ராமன்’ - அதிமுக தலைவர்களுக்கு எதிராக திரண்ட திமுகவினர்!

author img

By

Published : Feb 8, 2021, 8:04 PM IST

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

protest against minister sp velumani in pollachi
protest against minister sp velumani in pollachi

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு முக்கிய குற்றவாளிகள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அரவணைப்பில் பாதுகாப்பாக இருப்பதாகவும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் துறையில் அதிகப்படியான ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தமிழ்நாடு-கேரளா எல்லையிலுள்ள கனிம வளங்கள், கேரளாவுக்குக் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த கோரியும் திமுக கோவை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் காந்தி சிலை அருகில் சுமார் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்படை அலுவலர் எரித்துக் கொலை - மும்பை காவல் துறை சென்னையில் முகாம்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊழல்மணி, பொய்ராமன் என்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல் துறையினர் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உட்பட அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அதிமுக தலைவர்களுக்கு எதிராகத் திரண்ட திமுகவினர்

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு முக்கிய குற்றவாளிகள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அரவணைப்பில் பாதுகாப்பாக இருப்பதாகவும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் துறையில் அதிகப்படியான ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தமிழ்நாடு-கேரளா எல்லையிலுள்ள கனிம வளங்கள், கேரளாவுக்குக் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த கோரியும் திமுக கோவை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் காந்தி சிலை அருகில் சுமார் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்படை அலுவலர் எரித்துக் கொலை - மும்பை காவல் துறை சென்னையில் முகாம்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊழல்மணி, பொய்ராமன் என்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல் துறையினர் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உட்பட அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அதிமுக தலைவர்களுக்கு எதிராகத் திரண்ட திமுகவினர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.