ETV Bharat / city

மாணவர்களின் குறைகளை ஆன்லைன் மூலம் கேட்க நடவடிக்கை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

author img

By

Published : Jul 24, 2022, 5:07 PM IST

மாணவர்களின் குறைகளை ஆன்லைன் மூலம் கேட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கோயம்புத்தூர்: கணியூர் பகுதியில் உள்ள கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கரும்பலகையும் கணினியும் ஆசிரியர்களை போற்றுவோம் என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் உரையாடினார்

அப்போது பேசிய அவர், "காமராஜரை போல் இல்லாமல் அவரை தொட்டு விட வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணம் செய்து வருகிறேன். நான் எப்போதும் பிரச்சனைகள் குறித்து அந்த இடத்துக்குச் சென்று நேரில் விசாரிப்பேன். அப்போதுதான் அங்குள்ள பிரச்சனைகள் குறித்து கண்டறிய முடியும்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அதற்கான தீர்வும் காண முடியும், விமர்சனம் ஆக்கப்பூர்வமாக வந்தாலும் எதிர்மறையாக வந்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டு அதனை சரி செய்வது தான் என்னுடைய பழக்கம். விமர்சனங்கள் வந்தாலும் விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டு, அதனை தீர்ப்பது என்பது குறித்து யோசனை இருக்கும்.

பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையாக இருந்தாலும் தேர்தல் அறிக்கையில் கொடுத்ததாக இருந்தாலும் படிப்படியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றும்" என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆசிரியர்கள் குறைகளை நேரடியாக வந்து கொடுக்காமல் அதற்கு பதிலாக ஆசிரியர்கள் மனசு என்ற புகார் பெட்டியை தனது அலுவலகம் மற்றும் வீட்டில் வைக்க உள்ளேன். விரைவில் ஆன்லைன் மூலம் மாணவர்களின் குறைகளை கேட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்கள் மாணவர்கள் சந்தித்து உரையாற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடம் பேச முடியாத பட்சத்தில் மாணவர்களுக்கான டோல் ஃப்ரீ எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலமும் மாணவர்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம்.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் வழக்கமான ஒன்றுதான். அதன்படி தான் அறிக்கைகள் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். விழாவில் கேபிஆர் கல்வி குழுமங்களின் தலைவர் ராமசாமி, கல்லூரி முதல்வர் அகிலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழுக்கு வரும் ஹாலிவுட் நடிகை!

கோயம்புத்தூர்: கணியூர் பகுதியில் உள்ள கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கரும்பலகையும் கணினியும் ஆசிரியர்களை போற்றுவோம் என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் உரையாடினார்

அப்போது பேசிய அவர், "காமராஜரை போல் இல்லாமல் அவரை தொட்டு விட வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணம் செய்து வருகிறேன். நான் எப்போதும் பிரச்சனைகள் குறித்து அந்த இடத்துக்குச் சென்று நேரில் விசாரிப்பேன். அப்போதுதான் அங்குள்ள பிரச்சனைகள் குறித்து கண்டறிய முடியும்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அதற்கான தீர்வும் காண முடியும், விமர்சனம் ஆக்கப்பூர்வமாக வந்தாலும் எதிர்மறையாக வந்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டு அதனை சரி செய்வது தான் என்னுடைய பழக்கம். விமர்சனங்கள் வந்தாலும் விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டு, அதனை தீர்ப்பது என்பது குறித்து யோசனை இருக்கும்.

பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையாக இருந்தாலும் தேர்தல் அறிக்கையில் கொடுத்ததாக இருந்தாலும் படிப்படியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றும்" என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆசிரியர்கள் குறைகளை நேரடியாக வந்து கொடுக்காமல் அதற்கு பதிலாக ஆசிரியர்கள் மனசு என்ற புகார் பெட்டியை தனது அலுவலகம் மற்றும் வீட்டில் வைக்க உள்ளேன். விரைவில் ஆன்லைன் மூலம் மாணவர்களின் குறைகளை கேட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்கள் மாணவர்கள் சந்தித்து உரையாற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடம் பேச முடியாத பட்சத்தில் மாணவர்களுக்கான டோல் ஃப்ரீ எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலமும் மாணவர்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம்.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் வழக்கமான ஒன்றுதான். அதன்படி தான் அறிக்கைகள் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். விழாவில் கேபிஆர் கல்வி குழுமங்களின் தலைவர் ராமசாமி, கல்லூரி முதல்வர் அகிலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழுக்கு வரும் ஹாலிவுட் நடிகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.