ETV Bharat / city

'ஒற்றைக் காட்டு யானை அட்டகாசம்' - யானையை விரட்ட வனத்துறை தீவிரம்!

author img

By

Published : Oct 15, 2019, 3:52 PM IST

கோயம்புத்தூர்: ஆழியார் அணைப் பகுதியில் உள்ள கிராமத்தில் ஒற்றைக் காட்டு யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

A single wild elephant in Aliyar Dam

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் கடந்த மூன்று மாதங்கள் முன்பு இரண்டு பேரைத் தாக்கிய ஒற்றைக் காட்டு யானை, இரண்டு தினங்களுக்கு முன்பு மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து, வன அலுவலர் காசிலிங்கம் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, யானையை சர்க்கார்பதி வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனைத் தொடர்ந்து, அந்தக் காட்டு யானை ஆழியார் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதி வழியாக புளியகண்டி கிராமத்திற்குச் சென்றது. அங்கு சென்ற காட்டு யானை, மாரியம்மாள் என்பவரது வீட்டை இடித்து தரைமட்டம் செய்தது. அதனால், அச்சம் அடைந்த புளியகண்டி பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர்.

அதன்பின், பொதுமக்கள் அனைவரும் வால்பாறை சாலையில் உள்ள பாலத்தின் அடியில் கொட்டும் மழையில் நின்றபடி உள்ளனர். யானையின் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு வனத்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.

மேலும், வன அலுவலர் காசிலிங்கம் உத்தரவின் பேரில் வனக்காவலர் பிரபாகரன் தலைமையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்ட, கொட்டும் மழையில் வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காட்டு யானைகள் முகாம் - வாகன ஓட்டிகள் அச்சம்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் கடந்த மூன்று மாதங்கள் முன்பு இரண்டு பேரைத் தாக்கிய ஒற்றைக் காட்டு யானை, இரண்டு தினங்களுக்கு முன்பு மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து, வன அலுவலர் காசிலிங்கம் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, யானையை சர்க்கார்பதி வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனைத் தொடர்ந்து, அந்தக் காட்டு யானை ஆழியார் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதி வழியாக புளியகண்டி கிராமத்திற்குச் சென்றது. அங்கு சென்ற காட்டு யானை, மாரியம்மாள் என்பவரது வீட்டை இடித்து தரைமட்டம் செய்தது. அதனால், அச்சம் அடைந்த புளியகண்டி பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர்.

அதன்பின், பொதுமக்கள் அனைவரும் வால்பாறை சாலையில் உள்ள பாலத்தின் அடியில் கொட்டும் மழையில் நின்றபடி உள்ளனர். யானையின் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு வனத்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.

மேலும், வன அலுவலர் காசிலிங்கம் உத்தரவின் பேரில் வனக்காவலர் பிரபாகரன் தலைமையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்ட, கொட்டும் மழையில் வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காட்டு யானைகள் முகாம் - வாகன ஓட்டிகள் அச்சம்

Intro:damelephantBody:damelephantConclusion:பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் டேம்மில் ஒற்றை காட்டு யானை, புளிய கண்டி மக்கள் அச்சம், யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் . பொள்ளாச்சி-15 பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை பகுதியில் நவமலையில் கடந்த மூன்று மாதம் முன்புஇரண்டு பேரை கொன்ற ஒற்றை காட்டு யானை இரண்டு தினம் முன் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் 14 பேர் கொண்ட குழு யானையை விரட்டி சர்க்கார்பதி வனப்பகுதிக்குள் விரட்டினர் இதையடுத்து சர்க்கார்பதி வனப் பகுதியை விட்டு மாலை வெளியேறிய யானை அறிவுத் திருக்கோவில் வாய்க்கால் வழியாக வந்து ஆழியார் அணை ஒட்டி உள்ள வனப்பகுதி வழியாகபொது பணித்துறை விடுதியில் உள்ள பூ செட்டிகளை உடைந்து அணை வழியாக புளியகண்டிக்கு சென்று மாரியம்மாள் என்பவரது வீட்டை இடிந்து சூரையாடியது, மேலும் புளியக் கண்டி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வால்பாறை மெயின் ரோட்டில் உள்ள பாலத்தில் கொட்டும் மழையில் நின்றபடி உள்ளனர், வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு யானையின் நடமாட்டம் குறித்து தெரியப்படுத்தி வருகின்றனர், வனச்சரகர் காசிலிங்கம் உத்திரவின் பேரில் வனவர் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொட்டும் மழையில் வாகன ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.(முதல் செய்திEtv பாரத்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.