ETV Bharat / city

தபால் துறை தேர்வுகள் ஏன் ரத்து? உயர் நீதிமன்றம் கேள்வி - postal exams canceled

சென்னை: தபால் துறையில் தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன? என்பது குறித்து மத்திய அரசு விரிவான விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jul 23, 2019, 6:29 PM IST

அஞ்சல் துறையில் தபால்காரர்கள், உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இதை எதிர்த்து திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு சார்பில் இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும், மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, அனைத்து தபால் துறை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும், தெரிவித்தார்.

இதையடுத்து, ’தபால் துறை தேர்வு அறிவிப்பாணைகளை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன? என்பது குறித்து, ஆவணங்களுடன் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அஞ்சல் துறையில் தபால்காரர்கள், உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இதை எதிர்த்து திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு சார்பில் இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும், மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, அனைத்து தபால் துறை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும், தெரிவித்தார்.

இதையடுத்து, ’தபால் துறை தேர்வு அறிவிப்பாணைகளை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன? என்பது குறித்து, ஆவணங்களுடன் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Intro:Body:தபால் துறையில் தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன? என்பது குறித்து விரிவான விளக்கமளிக்க தபால் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஞ்சல் துறையில் தபால்காரர்கள், உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு கடந்த 14ம் தேதி நடத்தப்பட்டது.

இதில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டன.

இதை எதிர்த்து திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்த போது, தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வருங்காலங்களில் தபால் துறை நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை வந்த போது, தபால் துறை சார்பில் இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், பிராந்திய மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர பிராந்திய மொழியில் தேர்வு நடத்தப்படும் என கூறப்படவில்லை என சுட்டிக்காட்டினர்.

மேலும், மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜென்ரல் ஆஜராகி, அனைத்து தபால் துறை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும், அது தொடர்பாக விரிவான பதில்மனுவை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தபால் துறை தேர்வு அறிவிப்பாணைகளை ரத்து செய்தற்கான நிர்வாக காரணங்கள் என்ன? என்பது குறித்து ஆவணங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.