சென்னை: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில், மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் தொற்று மக்களிடையே பீதியை கிளப்பிவருகிறது.
இதனால் மத்திய மாநில அரசுகள், பொதுமக்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் முக்கிய பிரமுகர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். முன்னதாக நடிகர் விக்ரமிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் விக்ரமிற்கு கரோனா தொற்று