சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்ததை தொடர்ந்து மாநில அரசு இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனிடையே பல்வேறு அரசியல் தலைவர்கள், ஆட்சியர்கள், பிரபலங்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் லேசான சளி, காய்ச்சல் இருந்தால் அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதையும் படிங்க: வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை