ETV Bharat / city

தமிழச்சி தங்கபாண்டியன் அழகானவர்! உதயநிதி - உதயநிதி ஸ்டாலின்

சென்னை: திமுக சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் அழகான வேட்பாளர் என உதயநிதி ஸ்டாலின் புகழ்ந்துதள்ளியுள்ளார்.

nidhi
author img

By

Published : Mar 20, 2019, 1:23 PM IST

மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இலக்கிய களத்திலிருந்து தேர்தல் களத்துக்கு வந்திருக்கும் தமிழச்சி, மக்களவை உறுப்பினராக டெல்லி செல்வாரா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்துள்ளது. தேர்தல் பணிகளையும் அவர் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில், மேடவாக்கத்தில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதை மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். விழாவில் தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”நாளை முதல் 25 நாட்களுக்கு தேர்தல் பரப்புரையை தொடங்க இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழச்சி தங்கபாண்டியன் அழகான மற்றும் அறிவான வேட்பாளர். நான் அழகென்று சொல்வது, அவர் தமிழ் மேல் கொண்டிருக்கும் பற்றை கூறுகிறேன்.

திமுக அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 இடைத்தேர்தலிலும் வெற்றிபெறும் என நம்பிக்கை உள்ளது. வாரிசு அடிப்படையில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. கட்சிக்கு செய்த உழைப்புக்கு கொடுத்த வாய்ப்பு” என்றார்.

மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இலக்கிய களத்திலிருந்து தேர்தல் களத்துக்கு வந்திருக்கும் தமிழச்சி, மக்களவை உறுப்பினராக டெல்லி செல்வாரா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்துள்ளது. தேர்தல் பணிகளையும் அவர் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில், மேடவாக்கத்தில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதை மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். விழாவில் தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”நாளை முதல் 25 நாட்களுக்கு தேர்தல் பரப்புரையை தொடங்க இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழச்சி தங்கபாண்டியன் அழகான மற்றும் அறிவான வேட்பாளர். நான் அழகென்று சொல்வது, அவர் தமிழ் மேல் கொண்டிருக்கும் பற்றை கூறுகிறேன்.

திமுக அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 இடைத்தேர்தலிலும் வெற்றிபெறும் என நம்பிக்கை உள்ளது. வாரிசு அடிப்படையில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. கட்சிக்கு செய்த உழைப்புக்கு கொடுத்த வாய்ப்பு” என்றார்.

திமுக அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 தொகுதி நாடாளுமன்ற இடைதேர்தலிலும் வெற்றி பெரும் என நம்பிக்கை உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் எங்கள் தலைவர் ஸ்டாலின் கதாநாயகனாக இருப்பார். திமுக வெற்றிக்கு தேர்தல் அறிக்கை ஒரு காரணமாக இருக்கும். 

வாரிசு அடிப்படையில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை..கட்சிக்கு செய்த உழைப்புக்கு தலைவர் கொடுத்த வாய்ப்பு அது. 

பெயருக்கு முன் அடைமொழி சேர்த்து கொள்வது பிரியோஜனம் இல்லை. அதுக்கு தகுந்த மாறி செயல்பாடு இருக்க வேண்டும்.

என் பெயரில் நான் விருப்ப மனு தாக்கல் செய்தால்தான் நேர்காணலுக்கு கூப்பிட வேண்டும். என் பெயரில் வேறு நபர்கள் செய்தால் அவசியம் இல்லை. 

- உதயநிதி ஸ்டாலின்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.