ETV Bharat / city

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

author img

By

Published : Dec 9, 2019, 5:17 PM IST

181 பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

tnpsc
tnpsc

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் 1 (குரூப் 1 பணிகள்) 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பின்னர், மார்ச் 3ஆம் தேதி இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 438 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வும் ஜூலை 12, 13,14 ஆகிய தேதிகளில் ஒன்பதாயிரத்து 442 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், குருப் 1 அடங்கிய 181 காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல், எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியலும் தேர்வாணைய இணையதளமான ’ www.tnpsc.gov.in ‘ இல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு வரும் 23 முதல் 31ஆம் தேதி வரை (25 மற்றும் 29 ந் தேதி நீங்கலாக) நடைபெறும்.

வரும் 27, 30 ஆகிய நாள்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் (திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை) சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

அரசுப் பணியாளர் தேர்வாணையம்
அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மேலும், குருப் 1 தேர்விற்கு இனி நிலையான கால அட்டவணை பின்பற்றப்படும். அவ்வகையில்,

ஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு

ஏப்ரல் மாதம் – முதனிலைத் தேர்வு

மே மாதம் – முதனிலைத் தேர்வு முடிவுகள்

ஜூலை மாதம் – முதன்மை எழுத்துத் தேர்வு

நவம்பர் மாதம் - முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

டிசம்பர் மாதம் (முதல் வாரம்) – நேர்முகத் தேர்வு

டிசம்பர் மாதம் (இறுதி வாரம்) – கலந்தாய்வு / இறுதி முடிவுகள்

என்பதாக இருக்கும். மேலும், விரைவில் அனைத்துத் தேர்வுகளுக்கும் நிலையான கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் சார்பில் நீட் பயிற்சி' - செங்கோட்டையன் அடடே!

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் 1 (குரூப் 1 பணிகள்) 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பின்னர், மார்ச் 3ஆம் தேதி இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 438 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வும் ஜூலை 12, 13,14 ஆகிய தேதிகளில் ஒன்பதாயிரத்து 442 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், குருப் 1 அடங்கிய 181 காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல், எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியலும் தேர்வாணைய இணையதளமான ’ www.tnpsc.gov.in ‘ இல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு வரும் 23 முதல் 31ஆம் தேதி வரை (25 மற்றும் 29 ந் தேதி நீங்கலாக) நடைபெறும்.

வரும் 27, 30 ஆகிய நாள்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் (திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை) சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

அரசுப் பணியாளர் தேர்வாணையம்
அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மேலும், குருப் 1 தேர்விற்கு இனி நிலையான கால அட்டவணை பின்பற்றப்படும். அவ்வகையில்,

ஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு

ஏப்ரல் மாதம் – முதனிலைத் தேர்வு

மே மாதம் – முதனிலைத் தேர்வு முடிவுகள்

ஜூலை மாதம் – முதன்மை எழுத்துத் தேர்வு

நவம்பர் மாதம் - முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

டிசம்பர் மாதம் (முதல் வாரம்) – நேர்முகத் தேர்வு

டிசம்பர் மாதம் (இறுதி வாரம்) – கலந்தாய்வு / இறுதி முடிவுகள்

என்பதாக இருக்கும். மேலும், விரைவில் அனைத்துத் தேர்வுகளுக்கும் நிலையான கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் சார்பில் நீட் பயிற்சி' - செங்கோட்டையன் அடடே!

Intro:குருப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு Body:

குருப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு



சென்னை,

குருப் 1 பணியில் 181 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவு அறிவிப்புக்களுக்கான அட்டவணையினை தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளுள், ஆறு தேர்வுகளுக்கான முடிவுகளைத் தவிர, அனைத்து தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வாணையத்தால், ஆண்டுதோறும், நாற்பதுக்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுக்காக சுமார் முப்பது லட்சம் வரையிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கின்றனர்.


அதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் 1 (குருப் 1 பணிகள்) பதவிகளுக்கான 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 2019 ஜனவரி 1 ந் தேதி அன்று வெளியிடப்பட்டது. மார்ச் 3 ந் தேதி 2,29,438 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வும், ஜூலை 12, 13,14 ஆகியத் தேதிகளில் 9,442 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டன.

தற்பொழுது குருப் 1 ல் அடங்கிய பதவிகளுக்காக அறிவிக்கப்பட்ட 181 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வாணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதிக காலிப்பணியிடங்களுக்காக, அதிக விண்ணப்பதாரர்கள் எழுதிய குருப் 1 தேர்வு இதுவாகும். அதிகப்படியான விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இந்தத் தேர்வு முடிவுகள் மிக குறுகிய காலத்திற்குள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் எந்த மாநில தேர்வாணையமும் இந்த அளவிற்கு விரைவாக எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.


இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன வரும் 23 ந் தேதி முதல் 31 ந் தேதி வரை (25 மற்றும் 29 ந் தேதி நீங்கலாக) நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு வழக்கம்போல் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இமெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

வரும் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் (திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை) சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எனினும், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களைச் சேர்ந்த ஏதேனும் விண்ணப்பதாரர்கள் அந்த நாட்களில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் முன்கூட்டியே தேர்வாணையத்தை அணுகி, நேர்காணல் தேதியினை மற்றொரு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இனிவருங்காலங்களிலும் இதுபோன்ற தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் வெளியிடப்படும்.


மேலும் குருப் 1 ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்விற்கு நிலையான கால அட்டவணை பின்பற்றப்படும்.

ஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு

ஏப்ரல் மாதம் – முதனிலைத் தேர்வு

மே மாதம் – முதனிலைத் தேர்வு முடிவுகள்

ஜுலை மாதம் – முதன்மை எழுத்துத் தேர்வு

நவம்பர் மாதம் - முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

டிசம்பர் மாதம் (முதல் வாரம்) – நேர்முகத் தேர்வு

டிசம்பர் மாதம் (இறுதி வாரம்) – கலந்தாய்வு / இறுதி முடிவுகள்

இதுதவிர, தொகுதி-2 மற்றும் தொகுதி-4 – ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகளும் வழக்கமாக வருடந்தோறும் நடத்தப்படும். தொகுதி-1 -ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்விற்கான நிலையான கால அட்டவணையைப் போலவே தேர்வுகளுக்கும், நிலையான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.