ETV Bharat / city

ஆவடி சிறுமி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளியின் மனைவியும் கைது!

author img

By

Published : Jun 29, 2019, 7:33 AM IST

திருவள்ளூர்: ஆவடி அருகே நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவியையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

retired army man arrested

சென்னையை அடுத்த ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கோணிப்பையில் சடலமாக அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அவரது உறவினரும், ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான மீனாட்சிசுந்தரம்(60) என்பவரைப் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

4 வயது சிறுமி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்

இந்த நிலையில், இவ்வழக்கின் அதிரடி திருப்பமாக சிறுமியை கொலை செய்துவிட்டு அதனை மறைப்பதற்கு முயற்சித்த மீனாட்சி சுந்தரத்திற்கு உதவியதாக அவரின் மனைவி ராஜம்மாளயும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இருவரும் ‘போக்ஸோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையை அடுத்த ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கோணிப்பையில் சடலமாக அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அவரது உறவினரும், ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான மீனாட்சிசுந்தரம்(60) என்பவரைப் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

4 வயது சிறுமி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்

இந்த நிலையில், இவ்வழக்கின் அதிரடி திருப்பமாக சிறுமியை கொலை செய்துவிட்டு அதனை மறைப்பதற்கு முயற்சித்த மீனாட்சி சுந்தரத்திற்கு உதவியதாக அவரின் மனைவி ராஜம்மாளயும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இருவரும் ‘போக்ஸோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Intro:ஆவடி அருகே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது மனைவியையும் சிறையில் அடைத்தது காவல்துறை.Body:சென்னை  ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், அந்தோணி நகர், 3வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியர். இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றம் ஒரு மகள் என இரு குழந்தைகள் உண்டு. இந்நிலையில் நேற்று  மாலை 5 மணியளவில் செந்தமிழ்ச்செல்வி தனது மகன் கார்முகிலனை வீட்டில் இருந்து அருகில் உள்ள டியூசன் சென்டருக்கு அழைத்து  சென்றார். அப்போது, அவர் வீட்டில் சன்மதி மட்டும் தனியாக விட்டு விட்டு கதவை பூட்டாமல் சென்றார். பின்னர், சிறிது நேரம் கழித்து செந்தமிழ்ச்செல்வி வீடு திரும்பினார். அப்போது குழந்தை வீட்டில் தேடிய போது கழிவறையில் கோணிப்பையில் வைத்து பிளாஸ்டிக் டப்பில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு என்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். 


    பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், ராஜேந்திரனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது உறவினரும், முன்னாள் ராணுவ வீரருமான மீனாட்சிசுந்தரம் (60) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து போலீசார் மீனாட்சிசுந்தரம், அவரது மனைவி ராஜம்மாள் ஆகியோரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த தீவிர விசாரணை நடத்தினர். இதில், சிறுமி சன்மதியை மீனாட்சி சுந்தரம், பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.மேலும் இது தெரிந்தும் அவரது மனைவி ராஜம்மாள் உடலை மறைக்க உடந்தையாக செயல்பட்டுள்ளார்.இதனால் இருவரையும் கைது செய்த காவல்துறையினர்.கொலை,கற்பழிப்பு, உடலை மறைக்க நினைத்தது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.


 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-  செந்தமிழ்ச்செல்வி, மகனை அழைத்துக்கொண்டு டியூஷனுக்கு வர சென்ற போது தனியாய் இருந்த சன்மதியை மீனாட்சிசுந்தரம், தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவரது மனைவி மற்றொரு அறையில் இருந்து உள்ளார். பின்னர், அவர் தனது படுக்கை அறையில் சன்மதியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 


  அப்போது, அவள் சத்தம் போட்டு அலறி உள்ளார். இதனையடுத்து, யாராவது வந்து விடுவார்களோ என பயந்த மீனாட்சிசுந்தரம் வீட்டில் கிடந்த கயிற்றை எடுத்து சன்மதியின் கழுத்தில் போட்டு இறுக்கி கொலை செய்துள்ளார். இதன் பிறகு,  அவளது உடலை அரிசி கோணிப்பையில் வைத்து அவரது வீட்டு பாத்ரூமில் மறைத்து வைத்துள்ளார். பின்னர்,  வீடு திரும்பிய செந்தமிழ்ச்செல்வி, தனது மகளை காணவில்லை என கூறி மீனாட்சி சுந்தரம் வீடு வந்து உள்ளார். அப்போது அவர், வெளியில் தான் இருப்பாள் தேடுங்கள் என கூறி அனுப்பி உள்ளார். பின்னர், செந்தமிழ்ச் செல்வி வீட்டுக்கு வெளியே பல்வேறு இடங்களில் தேடி கொண்டிருந்தார். அப்போது மீனாட்சிசுந்தரம் சிறுமியின் உடலை கோணிப்பையுடன், ராஜேந்திரன் வீட்டுக்கு பின்புறமாக எடுத்து சென்று அவரது கழிவறையில் மறைத்து வைத்துள்ளார். பின்னர், அவரும் பொதுமக்களுடன் சேர்ந்து சிறுமியை தேடி உள்ளார். மேலும், அவர் ராஜேந்திரன் அழைத்துக்கொண்டு திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கவும் சென்றார். பின்னர், விரைந்து வந்த போலீசார் ராஜேந்திரன் வீட்டுக்குள் வந்து தேடிய போது சிறுமி சன்மதி கழிவறையில் கோணிப்பையுடன்  தண்ணீர் டப்பில் இருந்தது தெரியவந்தது.


     மேலும், போலீசார் பினாயில் வாடை வந்ததை அடுத்து மீனாட்சிசுந்தரம் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அவரது படுக்கை அறையில் சிறுமியின் ஒரு கம்மல், கண்ணாடி வளையல்கள் உடைந்து கிடந்தது தெரியவந்தது. இதோடு மட்டுமில்லாமல் அவரது வீட்டு ஜன்னல் ஸ்கீரினில்  ரத்த கரை படிந்து இருந்தது. மேலும், அவர் குழந்தையை கொன்று விட்டு பாத்ரூமில் கழுவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பாத்ரூம், வீட்டு படுக்கை அறை உள்ள சில இடங்களில் படிந்த ரத்தக்கறையை பினாயில் ஊட்டி கழுவி உள்ளார். இவ்வாறு மீனாட்சிசுந்தரம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டு பொதுமக்களுடன் சேர்ந்து நாடகமாடியதும் தெரியவந்தது. 


    இதற்கிடையில்  காலை 11.30மணியளவில் அதே பகுதியான நாகம்மை நகர், அந்தோணி நகர் ஆகிய நகர்களை சார்ந்த பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் காவல் நிலையம் எதிரே உள்ள சி.டி.எச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குற்றவாளி மீனாட்சிசுந்தரத்தின் மீது கடுமையான சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கக்கூடாது. அவருக்காக வழக்கறிஞர்கள் வாதாட கூடாது. அவரை எங்களுடன் ஒப்படைத்தால் நாங்களே தண்டனை வழங்கும் என ஆவேசமாக கூறினார்கள். இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது. 


     மேலும், சி.டி.எச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் ஜான் சுந்தர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டம் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசார் பொதுமக்களிடம், குற்றவாளி மீனாட்சிசுந்தரம் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் படி  நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் ஒத்துழைப்பு தாருங்கள் எனக்கூறி சமாதானம் செய்தனர். அதன்பிறகு, போலீசாரின் சமாதானத்தை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில், கொலையாளி மீனாட்சிசுந்தரத்தின் வீட்டு முன்பு 50மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதன் பிறகு,  மதியம் பிரேத பரிசோதனை முடிந்து சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பிறகு,  மாலை சிறுமியின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்படாமல் போலீஸ் பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து நேரடியாக அண்ணனூரில் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.