ETV Bharat / city

'தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது'  - மத்திய அமைச்சர் பாராட்டு

author img

By

Published : Aug 24, 2019, 6:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது என்று மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

central_minister_ashwini kumar

சென்னை ஐஐடியில் புற்று நோயை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் அஸ்வினி குமாா் கலந்துகொண்டார். தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது என்றும் உலகத்திலேயே ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டம் சிறப்பானதாக உள்ளது என்றும் கூறினார். 50 கோடி மக்களுக்கான ரூ.5 லட்சம் மருத்துவ உதவி திட்டம் உயிர் காக்க உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பண வசதி இல்லாத ஏழை-எளிய மக்களுக்கான சிறந்த திட்டமாக ஆயுஷ்மான் பாரத் உள்ளது என்றும் இந்த திட்டத்தின் மூலம் இந்திய மக்கள் உயர்தர சிகிச்சை பெற முடியும் எனவும் தெரிவித்தார். இந்த திட்டத்தில் இதுவரை 38 லட்சம் பேர் பயன் அடைந்து உள்ளதாகக் கூறிய அமைச்சர், நாடு முழுவதும் உள்ள ஒன்றரை லட்சம் சுகாதார மையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

இந்த சுகாதார மையங்களில் நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் உடல்நலம் குறித்து அறிந்து தேவையான சிகிச்சைகள் வழங்க ஏழு லட்சம் சுகாதார உதவியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.


மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் பேட்டி
மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் பேட்டி

'தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது' - மத்திய அமைச்சர் பாராட்டு

சென்னை ஐஐடியில் புற்று நோயை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் அஸ்வினி குமாா் கலந்துகொண்டார். தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது என்றும் உலகத்திலேயே ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டம் சிறப்பானதாக உள்ளது என்றும் கூறினார். 50 கோடி மக்களுக்கான ரூ.5 லட்சம் மருத்துவ உதவி திட்டம் உயிர் காக்க உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பண வசதி இல்லாத ஏழை-எளிய மக்களுக்கான சிறந்த திட்டமாக ஆயுஷ்மான் பாரத் உள்ளது என்றும் இந்த திட்டத்தின் மூலம் இந்திய மக்கள் உயர்தர சிகிச்சை பெற முடியும் எனவும் தெரிவித்தார். இந்த திட்டத்தில் இதுவரை 38 லட்சம் பேர் பயன் அடைந்து உள்ளதாகக் கூறிய அமைச்சர், நாடு முழுவதும் உள்ள ஒன்றரை லட்சம் சுகாதார மையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

இந்த சுகாதார மையங்களில் நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் உடல்நலம் குறித்து அறிந்து தேவையான சிகிச்சைகள் வழங்க ஏழு லட்சம் சுகாதார உதவியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.


மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் பேட்டி
மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் பேட்டி
Intro:சென்னை விமான நிலையத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை இணைஅமைச்சா் அஸ்வினி குமாா் பேட்டிBody:சென்னை விமான நிலையத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை இணைஅமைச்சா் அஸ்வினி குமாா் நிருபர்களிடம் கூறியதாவது:-


சென்னை ஐ.ஐ.டியில் கேன்சர் நோய்க்கு எதிரான போர் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்வேன். பின்னர் தன்னார்வ அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வேன். தமிழகத்தில் சுகாதார துறையில் சிறப்பாக செயல்படுகிறது.

உலகத்திலேயே ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டம் சிறப்பானதாக உள்ளது. 50 கோடி மக்களுக்கான ரூ.5 லட்சம் மருத்துவ உதவி திட்டம் உயிர் காக்க உறுதுணையாக இருக்கும்.

பண வசதி இல்லாத, உதவிகள் இல்லாமல் இருப்பவர்கள், ஏழை- எளிய மக்களுக்காக சிறந்த திட்டமாக ஆயுஷ்மான் பாரத் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்தவித உதவிகளின்றி தமிழ்நாடு, டெல்லி உள்பட முழுவதும் ஏழை, எளிய மக்களும் உயர்தர சிகிச்சை பெற முடியும். இந்த திட்டத்தில் 38 லட்சம் மக்கள் இதுவரை பயன் அடைந்து உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள ஒன்றரை லட்சம் சுகாதார மையங்களாக ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த சுகாதார மையங்களில் நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள மக்களின் உடல்நலம் குறித்து அறிந்து தேவையான சிகிச்சைகள் வழங்க 7 லட்சம் சுகாதார உதவியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.