ETV Bharat / city

கலந்தாய்வுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துழைக்காது: அரசுக்கு சூரப்பா கடிதம் - சென்னை

சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வினை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தினால் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துழைக்காது என தமிழக அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

ceg
author img

By

Published : Mar 29, 2019, 5:02 PM IST

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா கூறியதாவது, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைகழகம் மூன்றாண்டுகள் நடத்தும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் கடந்த 28.12.2018-ம் தேதி அன்று உயர் கல்வித்துறை செயலாளர் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மற்றும் முதுகலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துவது குறித்து அரசாணையை வெளியிட்டிருக்கிறார். அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தலைவராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் இணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு போடப்பட்ட அரசாணையின்படி வரும் கல்வியாண்டு மற்றும் அடுத்து கல்வியாண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது.

இந்த நிலையில் தன்னை கலந்தாலோசிக்காமல் கலந்தாய்வு நடத்துவதற்குரிய குழுவினை மாற்றி அமைத்து உயர்கல்வித்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதனை ரத்து செய்ய வேண்டுமென ஏற்கனவே அரசுக்கு கடிதம் எழுதி இருந்தேன், தற்போது பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வினை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தினால் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துழைக்காது என தமிழக அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன், என்றார்.

மேலும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த ஆண்டிற்குரிய கலந்தாய்வு நடத்துவதற்கு அரசாணையை மாற்றித் தர வேண்டும் எனவும் சூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா கூறியதாவது, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைகழகம் மூன்றாண்டுகள் நடத்தும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் கடந்த 28.12.2018-ம் தேதி அன்று உயர் கல்வித்துறை செயலாளர் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மற்றும் முதுகலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துவது குறித்து அரசாணையை வெளியிட்டிருக்கிறார். அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தலைவராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் இணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு போடப்பட்ட அரசாணையின்படி வரும் கல்வியாண்டு மற்றும் அடுத்து கல்வியாண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது.

இந்த நிலையில் தன்னை கலந்தாலோசிக்காமல் கலந்தாய்வு நடத்துவதற்குரிய குழுவினை மாற்றி அமைத்து உயர்கல்வித்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதனை ரத்து செய்ய வேண்டுமென ஏற்கனவே அரசுக்கு கடிதம் எழுதி இருந்தேன், தற்போது பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வினை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தினால் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துழைக்காது என தமிழக அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன், என்றார்.

மேலும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த ஆண்டிற்குரிய கலந்தாய்வு நடத்துவதற்கு அரசாணையை மாற்றித் தர வேண்டும் எனவும் சூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Intro:
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அண்ணா பல்கலைக் கழகம் ஒத்துழைக்காது
துணைவேந்தர் சூரப்பா அரசுக்கு கடிதம்


Body:சென்னை,
பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வினை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தினால் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துழைக்காது என அரசுக்கு அதிகாரப்பூர்வமாக துணைவேந்தர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா கூறியதாவது, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைகழகம் மூன்றாண்டுகள் நடத்தும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கடந்த 28. 12. 2018 ம் தேதி அன்று உயர் கல்வித்துறை செயலாளர் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மற்றும் முதுகலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துவது குறித்து அரசாணையை வெளியிட்டிருக்கிறார். அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான தலைவராகவும், போல் நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் இணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு போடப்பட்ட அரசாணையின்படி வரும் கல்வியாண்டு மற்றும் அடுத்து கல்வியாண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில் தன்னை கலந்தாலோசிக்காமல் கலந்தாய்வு நடத்துவதற்குரிய குழுவினை மாற்றி அமைத்து உயர்கல்வித்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதனை ரத்து செய்ய வேண்டுமென ஏற்கனவே அரசுக்கு கடிதம் எழுதி இருந்தேன்.
ஆனால் அரசு இதுவரை எந்தவித பதிலையும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம் ஐ டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் உயர்கல்வித்துறை செயலாளர் கலந்து கொண்டார். அப்போதும் அவர் கலந்தாய்வு நடத்துவது குறித்து தன்னிடம் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் பொறியியல் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசிற்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தில் பொறியியல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2019 -20 கல்வி ஆண்டில் மட்டும் பொறியியல் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். 2020 -21 ம் கல்வியாண்டு முதல் தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் மூலம் கலந்தாய்வு நடத்தி கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை என தெரிவித்துள்ளேன். மேலும் அந்த கடிதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடக்கும் கலந்தாய்விற்கு அனுமதிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளேன்.
தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்தும் கலந்தாய்விற்கு தங்களால் எந்த விதத்திலும் ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்பதை தெளிவுபட கூறியுள்ளேன்.
எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த ஆண்டிற்குரிய கலந்தாய்வு நடத்துவதற்கு அரசாணையை மாற்றி தர வேண்டும் என கடிதம் எழுதியுள்ளேன்.
மேலும் எம்சிஏ எம்பிஏ mtech உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறைய நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கும் அந்தக் குழுவிற்கு அதிகாரம் அளித்து அரசாணை வெளியிட்டு உள்ளார். தற்போது தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையராக உள்ள விவேகானந்தன் ஐ.ஏ.எஸ். அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயில்வதற்கு விண்ணப்பித்துள்ளார். ஒரு முனைவர் பட்டம் மாணவரால் முதுகலை படிப்பில் சேருவதற்கான வினாத்தாள்களை எப்படி தயார் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். அதேபோல் அவர் எவ்வாறு சிறப்பாக கலந்தாய்வு நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பல்கலைக்கழகத்தின் நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீடு இடங்களும் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கலந்தாய்வு மே நடத்துவதில் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் உயர்கல்வித் துறை தான். அண்ணா பல்கலைக்கழகம் இல்லை எனவும் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மேற் கல்வி துறை இடையே நடைபெறும் பனிப்போரால் பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்வது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அரசின் அரசாணையை ஏற்க முடியாது என துணைவேந்தர் ஒருவர் தெரிவித்துள்ளது கல்வியாளர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.