ETV Bharat / city

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடனுதவி : சட்டப்பேரவையில் அறிவிப்பு - சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000 கோடி கடனுதவி வழங்கப்படும்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானிய கோரிக்கையில், 28 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000 கோடி கடனுதவி , ஊரகப் பகுதிகளில் ரூ.1,261 கோடி மதிப்பீட்டில் 12.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் அவற்றில் இடம்பெற்றிருந்தன.

TN assembly
TN assembly
author img

By

Published : Apr 8, 2022, 8:03 AM IST

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஏப். 7) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானிய கோரிக்கையை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தாக்கல் செய்தார். அதில், 2022-23 ஆண்டிற்கான 28 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

  • குக்கிராமங்களை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காக சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.1,346 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • மாநில மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஊரக சாலைகளை வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றதாக தரம் உயர்த்த 1,200 கி.மீ., சாலைகள் மற்றும் 136 பாலங்கள் ரூ.874 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • எழில்மிகு கிராமங்களை உருவாக்க சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் ரூ.431.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • ஊரகப் பகுதிகளில் ரூ.1,261 கோடி மதிப்பீட்டில் 12.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
  • நீர் மற்றும் நிலவள மேலாண்மைப் பணிகள் ரூ.683.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • கிராம ஊராட்சிகளில் மின் ஆளுமையைச் செயல்படுத்திட அலுவலர்களுக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் பயிற்சி வழங்குவதுடன், புதிய கணினி அச்சிடும் இயந்திரம் மற்றும் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.
  • ஊராட்சிகளின் அனைத்துச் சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும்.
  • கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணையவழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும்.
  • கிராம ஊராட்சியின் மின் நுகர்வு மற்றும் குடிநீர்க் கட்டணம் இணையவழி மூலம் செலுத்தும் முறை உருவாக்கப்படும்.
  • தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரப் பரப்பை அதிகரிக்கவும், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும், ரூ.381.21 கோடி மதிப்பீட்டில் 25 லட்சம் பனை விதைகள் மற்றும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருக்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேளாண் நிலங்களில் 8.45 லட்சம் பழ மரக்கன்றுகள் ரூ.11.51 கோடி மதிப்பீட்டில் நடப்படும்.
  • பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க மகளிர் குழுக்களின் கூட்டமைப்புகளை ஈடுபடுத்தி, புதிய நாற்றங்கால்கள் ரூ.92.12 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
  • இரும்புசத்துக் குறைபாடில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முருங்கை மரக்கன்றுகள் வழங்கப்படும்.
  • 388 வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழா ரூ.1.94 கோடி செலவில் நடத்தப்படும்.
  • 45 ஆயிரம் இளைஞர்களுக்கு ரூ.170 கோடி செலவில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்படும்.
  • மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும்.
  • சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்படும்.
  • ஊரகப் பகுதிகளில் உள்ள 15 ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.225 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
  • 25 ஆயிரம் புதிய உதவி சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுக்களுக்கு ரூ.30 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும்.
  • ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கும் தேசிய அளவில் தலைசிறந்த நிறுவனங்களில் தலைமைத்துவம் மற்றும் வேளாண்மை பயிற்சிகள் ரூ.3.8 கோடி செலவில் வழங்கப்படும்.
  • பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்துவதற்காக, மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான திட்ட மேலாண்மை அலகுகள் ஏற்படுத்தப்படும்.
  • வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்ககத்தில் மக்கள் குறைதீர் மையம் அமைக்கப்படும்.
  • நிலமற்ற ஏழை பயனாளிகளுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் ரூ.14.93 கோடி மதிப்பீட்டில், ஊரகப் பகுதிகளில் முதன்முறையாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.
  • சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாக, அனைத்து சமூகத்தினரும் பயன்பெறத்தக்க வகையில் முன்மாதிரியாக 10 எரிவாயு தகன மேடைகள் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • ஊரகப் பகுதிகளில் சமூக பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி மேற்பார்வையாளர்களின் நேரடி நியமனம் மேற்கொள்ளப்படும்.
  • 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலகக் கட்டிடங்கள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • கிராமப்புற குழந்தைகளுக்காக 500 அங்கன்வாடி மையங்கள் ரூ.59.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

இதையும் படிங்க: வன்னியர் இடஒதுக்கீட்டின் நிலை என்ன?- முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஏப். 7) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானிய கோரிக்கையை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தாக்கல் செய்தார். அதில், 2022-23 ஆண்டிற்கான 28 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

  • குக்கிராமங்களை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காக சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.1,346 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • மாநில மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஊரக சாலைகளை வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றதாக தரம் உயர்த்த 1,200 கி.மீ., சாலைகள் மற்றும் 136 பாலங்கள் ரூ.874 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • எழில்மிகு கிராமங்களை உருவாக்க சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் ரூ.431.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • ஊரகப் பகுதிகளில் ரூ.1,261 கோடி மதிப்பீட்டில் 12.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
  • நீர் மற்றும் நிலவள மேலாண்மைப் பணிகள் ரூ.683.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • கிராம ஊராட்சிகளில் மின் ஆளுமையைச் செயல்படுத்திட அலுவலர்களுக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் பயிற்சி வழங்குவதுடன், புதிய கணினி அச்சிடும் இயந்திரம் மற்றும் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.
  • ஊராட்சிகளின் அனைத்துச் சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும்.
  • கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணையவழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும்.
  • கிராம ஊராட்சியின் மின் நுகர்வு மற்றும் குடிநீர்க் கட்டணம் இணையவழி மூலம் செலுத்தும் முறை உருவாக்கப்படும்.
  • தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரப் பரப்பை அதிகரிக்கவும், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும், ரூ.381.21 கோடி மதிப்பீட்டில் 25 லட்சம் பனை விதைகள் மற்றும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருக்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேளாண் நிலங்களில் 8.45 லட்சம் பழ மரக்கன்றுகள் ரூ.11.51 கோடி மதிப்பீட்டில் நடப்படும்.
  • பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க மகளிர் குழுக்களின் கூட்டமைப்புகளை ஈடுபடுத்தி, புதிய நாற்றங்கால்கள் ரூ.92.12 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
  • இரும்புசத்துக் குறைபாடில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முருங்கை மரக்கன்றுகள் வழங்கப்படும்.
  • 388 வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழா ரூ.1.94 கோடி செலவில் நடத்தப்படும்.
  • 45 ஆயிரம் இளைஞர்களுக்கு ரூ.170 கோடி செலவில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்படும்.
  • மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும்.
  • சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்படும்.
  • ஊரகப் பகுதிகளில் உள்ள 15 ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.225 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
  • 25 ஆயிரம் புதிய உதவி சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுக்களுக்கு ரூ.30 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும்.
  • ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கும் தேசிய அளவில் தலைசிறந்த நிறுவனங்களில் தலைமைத்துவம் மற்றும் வேளாண்மை பயிற்சிகள் ரூ.3.8 கோடி செலவில் வழங்கப்படும்.
  • பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்துவதற்காக, மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான திட்ட மேலாண்மை அலகுகள் ஏற்படுத்தப்படும்.
  • வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்ககத்தில் மக்கள் குறைதீர் மையம் அமைக்கப்படும்.
  • நிலமற்ற ஏழை பயனாளிகளுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் ரூ.14.93 கோடி மதிப்பீட்டில், ஊரகப் பகுதிகளில் முதன்முறையாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.
  • சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாக, அனைத்து சமூகத்தினரும் பயன்பெறத்தக்க வகையில் முன்மாதிரியாக 10 எரிவாயு தகன மேடைகள் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • ஊரகப் பகுதிகளில் சமூக பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி மேற்பார்வையாளர்களின் நேரடி நியமனம் மேற்கொள்ளப்படும்.
  • 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலகக் கட்டிடங்கள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • கிராமப்புற குழந்தைகளுக்காக 500 அங்கன்வாடி மையங்கள் ரூ.59.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

இதையும் படிங்க: வன்னியர் இடஒதுக்கீட்டின் நிலை என்ன?- முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

For All Latest Updates

TAGGED:

tn assembly
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.