ETV Bharat / city

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு: திபெத்திய பேராசிரியர் கைது!

author img

By

Published : Oct 9, 2019, 7:37 AM IST

Updated : Oct 9, 2019, 8:16 AM IST

சென்னை: சீன அதிபர் ஜின்பிங் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திபெத்தியப் பேராசிரியர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Chinese President Visiting to India

சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனையடுத்து சென்னை முழுவதும் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. முன்னதாக திபெத்தை, தனி நாடாக அறிவிக்ககோரி சீனாவுக்கு எதிராக, திபெத்தியர்களின் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சீனாவுக்கு எதிராகப் போராடக்கூடியவர்கள் சென்னையில் சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் சந்தேகத்திற்கிடமான 21 திபெத்தியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, சேலையூர் காவல் நிலையத்தினர் எட்டு திபெத்திய மாணவர்களைக் கைது செய்த நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் டென்சிங் நூர்பு என்பவரை நீலாங்கரை காவல் நிலையத்தினர் கைது செய்துள்ளனர்.

டென்சிங் நூர்பு கடந்த சில ஆண்டுகளாகவே திபெத் தொடர்பான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வேறு யாரேனும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி, சீன அதிபரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நிகழக் காரணம் என்ன தெரியுமா?

சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனையடுத்து சென்னை முழுவதும் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. முன்னதாக திபெத்தை, தனி நாடாக அறிவிக்ககோரி சீனாவுக்கு எதிராக, திபெத்தியர்களின் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சீனாவுக்கு எதிராகப் போராடக்கூடியவர்கள் சென்னையில் சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் சந்தேகத்திற்கிடமான 21 திபெத்தியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, சேலையூர் காவல் நிலையத்தினர் எட்டு திபெத்திய மாணவர்களைக் கைது செய்த நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் டென்சிங் நூர்பு என்பவரை நீலாங்கரை காவல் நிலையத்தினர் கைது செய்துள்ளனர்.

டென்சிங் நூர்பு கடந்த சில ஆண்டுகளாகவே திபெத் தொடர்பான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வேறு யாரேனும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி, சீன அதிபரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நிகழக் காரணம் என்ன தெரியுமா?

Intro:Body:சீன அதிபர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திபேத்திய பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனா அதிபர்-பிரதமர் மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. சென்னை முழுவதும் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. திபெத்தை,சீனா ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாகவும், சீனாவுக்கு எதிராக போராடக்கூடியவர்கள் சென்னையில் சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் சந்தேகத்திற்கிடமாக 21 திபெத்தியர்கள் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலையூர் காவல்துறையினர் 8 திபேத்திய மாணவர்களை கைது செய்த நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் டென்சின் நூர்பு என்பவரை நீலாங்கரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

டென்சிங் நூர்பு கடந்த சில ஆண்டுகளாகவே திபெத் தொடர்பான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போராட்டம் தொடர்பாக வேறு யாரேனும் திட்டமிட்டு இருக்கிறார்களா என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Oct 9, 2019, 8:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.